Lyricist R.V. Udayakumar

நெனவு தெரிஞ்ச பாடல் வரிகள்

நெனவு தெரிஞ்ச நாள் முதலா நீதான் எனக்கு சாமி
நெனவு தெரிஞ்ச நாள் முதலா நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே கண்ணில் தெரியும் சாமி

அன்பை பொழிந்து வரும் கங்கையம்மா
நீ மஞ்சள் நிலவுக்கொரு தங்கையம்மா
அன்பை பொழிந்து வரும் கங்கையம்மா
நீ மஞ்சள் நிலவுக்கொரு தங்கையம்மா

கண்ணே கண்ணம்மா நீ கோயில் குயிலம்மா
நீ கோயில் குயிலம்மா

நெனவு தெரிஞ்ச நாள் முதலா நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே கண்ணில் தெரியும் சாமி

தாய் நீ சேய் போல் தாலாட்டினாய் என்னை பாராட்டினாய் என்னை
தவமாய்க் கிடந்தேன் சீராட்டினாய் என்னை நான் பாடுவேன் உன்னை

இந்தக் குயில் சந்தோஷமாய் கண் உறங்கத்தானே
பட்ட துயர் ஒண்ணா ரெண்டா நீயும் எந்தன் தாயே
பாடும் பாட்டு லாலி பாசம் என்னும் வேலி
பாடும் பாட்டு லாலி பாசம் என்னும் வேலி

உந்தன் மடி தாயின் மடிதானே
அன்பில் தினம் தந்தேன் எனை நானே..

நெனவு தெரிஞ்ச நாள் முதலா நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே கண்ணில் தெரியும் சாமி

தீபம் எரிய திரியாகியே நானும் ஒளி காட்டுவேன் நாளும்
உயிரை கரைத்தே உறவாகியே நானும் வளமாக்குவேன் உன்னை

பொன் நகையும் வெட்கம் கொள்ளும் புன்னகையை காமி
மண்ணில் உன்னை தத்தெடுத்தான் இந்த வெள்ளைச் சாமி

நிலவில்லாமல் வானா நீ இல்லாமல் நானா
நிலவில்லாமல் வானா நீ இல்லாமல் நானா
வேதம் எங்கும் உந்தன் மொழி தானே
வாழ்க்கை எல்லாம் இன்னும் ஒளி தானே…

நெனவு தெரிஞ்ச நாள் முதலா நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே கண்ணில் தெரியும் சாமி

அன்பை பொழிந்து வரும் கங்கையம்மா
நனா நன நானன்னன்னா
நீ மஞ்சள் நிலவுக்கொரு தங்கையம்மா
நானா நன நானன்னன்னா

கண்ணே கண்ணம்மா நீ கோயில் குயிலம்மா நீ கோயில் குயிலம்மா
நெனவு தெரிஞ்ச நாள் முதலா நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே கண்ணில் தெரியும் சாமி…

Movie: Kakkai Siraginilae
Lyrics: R.V. Udhaya Kumar
Music: Ilaiyaraaja