Lyricist R.V. Udayakumar

சின்ன சின்ன பாடல் வரிகள்

சின்ன சின்ன சொல்லெடுத்து சொந்தம் சொல்ல நீ போ தூது
சொன்ன சொல்லில் குற்றமில்லை சுத்தம் என்று நீ போய் கூறு

சின்ன சின்ன சொல்லெடுத்து சொந்தம் சொல்ல நீ போ தூது
சொன்ன சொல்லில் குற்றமில்லை சுத்தம் என்று நீ போய் கூறு

தனியாக மாமன் துணை தேடி வாட புரியாமல் நானும் பரிகாரம் தேட

சின்ன சின்ன சொல்லெடுத்து சொந்தம் சொல்ல நீ போ தூது
சொன்ன சொல்லில் குற்றமில்லை சுத்தம் என்று நீ போய் கூறு

கண்ணீர் கரைந்துருகும் கன்னி மெழுகானேன் நானே நீ பாரடி
மன்னன் மனம் கலங்க மண்ணில் சருகானேன் பூவே நீ கூறடி

நித்திரையை நானும் மூடி நித்தம் ஒரு கானம் பாடி
உத்தமியை தேடி தேடி கத்தும் ஒரு வானம் பாடி

உன்னுதட்டில் பொய்யை வைத்து முள்ளில் தைத்த பூவாய் ஆனேன்
என் மனதில் பாசம் வைத்து கல்லில் செய்த தேராய் போனேன்
அலை மேல் படகாய் ஆனேன்

சின்ன சின்ன சொல்லெடுத்து சொந்தம் சொல்ல நீ போ தூது
சொன்ன சொல்லில் குற்றமில்லை சுத்தம் என்று நீ போய் கூறு

சொல்லால் விளைந்ததிந்த சொந்தக்கதை தானே பூவே நீ கேளடி
பெண்ணே வருத்தமில்லை நெஞ்சில் என்ன பாரம் நீயே போய் கூறடி

கன்னிமையை மீறும் ஈரம் கன்னி இவள் சோகம் போரும்
வெண்ணிலவை மூடும் மேகம் விட்டு விலகாதோ தூரம்

வண்ணக்கிளி போனபின்னே தன்னந்தனி ஆனேன் நானே
எண்ணி எண்ணி ஆவதென்ன கண்கள் உறங்காயோ மாமா
உயிர் போய் உடலானேன்

சின்ன சின்ன சொல்லெடுத்து சொந்தம் சொல்ல நீ போ தூது
சொன்ன சொல்லில் குற்றமில்லை சுத்தம் என்று நீ போய் கூறு
குயிலோடு சேரு ஒரு பாட்டு கேளு அவள் சோகம் தீர வழி நீயும் பாரு

சின்ன சின்ன சொல்லெடுத்து சொந்தம் சொல்ல நீ போ தூது
சொன்ன சொல்லில் குற்றமில்லை சுத்தம் என்று நீ போய் கூறு…

Movie: Rajakumaran
Lyrics: R.V. Udhaya Kumar
Music: Ilaiyaraaja