Lyricist Thamarai

நெஞ்சில் மாமழை பாடல் வரிகள்

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை 
தந்து வானம் கூத்தாட 
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது 
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது 
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை 
தந்து வானம் கூத்தாட 
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட

வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது 
அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது
வாராமல் போகும் நாட்கள் வீணே என 
வம்பாக சண்டை போட வைக்குது

சொல்லப் போனால் என் நாட்களை 
வண்ணம் பூசி தந்தவளும் நீதான் 
துள்ளல் இல்லா என் பார்வையில்
தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது 
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது 
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை 
தந்து வானம் கூத்தாட
ஹா ஹா ஹா ஹா ஆ

பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே
ராசாவை தேடி கண்கள் ஓடுமே

ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே 
பேசாமல் மாற்றிக் கொள்ள தோன்றுமே

பெண்கள் இல்லா என் வீட்டிலே பாதம் 
வைத்து நீயும் வர வேண்டும் 
தென்றல் இல்லா என் தோட்டத்தில்
உன்னால் தானே காற்று வரும் மீண்டும்

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது 
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது 
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை 
தந்து வானம் கூத்தாட 
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது 
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது 
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது…

Movie: Nimir
Lyrics: Thamarai
Music: Ajaneesh Loknath

Leave a Reply