Mannan Koorai Selai Song Lyrics

Movie: Siraichalai (1996)
Music: Ilayaraja
Lyricists: Arivumathi
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான் கை கூடாதோ சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ

பெண்: கண்ணன் வந்து நேரில் என்னைச் சேரும் நாளில் என்னுயிரில் மின்னல் தானோ இனி பூ மழையும் கொஞ்சும் தேனோ

பெண்: இள மாப்பிள்ளைக்கு புதுப் பொண்ணும் நான் தானா நல் முத்தே வா வா ஓஹோ ஓஹோ ஹோ

பெண்: மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான் கை கூடாதோ சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ

ஆண்: ஹே ஹே ஹே தேன் எடுத்து வச்சிருக்கும் தேனீ ஹோ ஹோ மறு பௌர்ணமிக்குள் தேன் குடிக்கும் பார் நீ ஹோ ஹோ

ஆண்: அடி குயில்கள் பாடும் நாள் வந்தால் அடி குலவை சத்தம் கேட்காதா உன் தவிக்கும் துயரம் தீர்க்க தான் அவன் காலடி சத்தம் கேட்காதா

பெண்: பட்டாடை மேல் எல்லாம் என் மன்னவன் வாசனை உண்டு நாள் தோறும் நான் வைப்பேன் பொன் விளக்கேற்றி

பெண்: பூ தூங்கும் மஞ்சத்தில் முகம் வேட்கையில் தாவணி வீசி இனி நாள் தோறும் தாலாட்டும் தாயும் நான் தான்

பெண்: தீயில் தீரும் மோகங்கள் நீரில் தீரா தாகங்கள்
குழு: ஹையோ ஹையோ ஹையோ ஹையோ

பெண்: கப்பல் கற்பனை வேகத்தால் போய் இன்றே அவருடன் வந்திடுமா
குழு: ஹையோ ஹையோ ஹையோ ஹையோ

பெண்: உன் வழி பார்க்கும் கன்னியின் இரு விழி ஓய்வும் கொள்ளட்டும் முத்தம் படித்தவன் நெஞ்சில் நானே மெத்தை இடும் நாள் தான் ராகங்கள் பூச்சூடும்

பெண்: மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான் கை கூடாதோ சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ

பெண்: இள மாப்பிள்ளைக்கு புதுப் பொண்ணும் நான் தானா நல் முத்தே வா வா ஓஹோ ஓஹோ ஹோ

பெண்: மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான் கை கூடாதோ சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ