Suttum Sudar Vizhi Song Lyrics

Movie: Siraichalai (1996)
Music: Ilayaraja
Lyricists: Arivumathi
Singers: M.G. Sreekumar and K.S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: { சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டில் இடும் தேவி கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி } (2)

ஆண்: நிலவை பொட்டு வைத்து பவழம் பட்டம் கட்டி அருகில் நிற்கும் உன்னை வரவேற்பேன் நான் வரவேற்பேன் நான்

குழு: சித்திரை பூவே பக்கம் வர சிந்திக்கலாமா அண்ணனை இங்கே தள்ளி வைத்து தண்டிக்கலாமா

ஆண்: சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டில் இடும் தேவி கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி

ஆண்: உனது பெயரை மந்திரம் என ஓதுவேன் ஓதுவேன்
பெண்: மின்மினிகளில் நம் நிலவினை தேடுவேன் தேடுவேன்

ஆண்: உனது பெயரை மந்திரம் என ஓதுவேன் ஓதுவேன்
பெண்: மின்மினிகளில் நம் நிலவினை தேடுவேன் தேடுவேன்

ஆண்: சந்தங்களில் நனையுதே மௌனங்கள் தாகமாய்
பெண்: மன்னன் முகம் தோன்றி வரும் கண்ணிலே தீபமாய்

ஆண்: என்றும் உன்னை நான் பாடுவேன் கீதாஞ்சலியாய் உயிரே உயிரே பிரியமே சகி

பெண்: நானா நானா நானா ன ன ன ன நானா
ஆண்: நானா நானா நானா ன ன ன ன நானா

பெண்: சுட்டும் சுடர் விழி நாள் முழுதும் தூங்கலையே கண்ணா

ஆண்: தங்க நிலவுக்கு ஆரிராரோ பாட வந்தேன் கண்ணா

குழு: ………..

பெண்: இரு விழிகளில் உயிர் வழியுது ஊமையாய் ஊமையாய்
ஆண்: முள் மடியினில் மலர் விழுந்தது சோகமாய் சோகமாய்

பெண்: இரு விழிகளில் உயிர் வழியுது ஊமையாய் ஊமையாய்
ஆண்: முள் மடியினில் மலர் விழுந்தது சோகமாய் சோகமாய்

பெண்: விண்ணுலகம் எரியுதே பௌர்ணமி தாங்குமா
ஆண்: இன்று எந்தன் சூரியன் காலையில் தூங்குமோ

பெண்: கனவில் உன்னை நான் சேர்ந்திட இமையே தடையாய் விரிந்தால் சிறகே இங்கு சிலுவையாய்

ஆண்: { சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டில் இடும் தேவி கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி } (2)

ஆண்: நிலவை பொட்டு வைத்து பவழம் பட்டம் கட்டி அருகில் நிற்கும் உன்னை வரவேற்பேன் நான் வரவேற்பேன் நான்

ஆண்: { சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டில் இடும் தேவி கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி } (2)