Apoorva Raagangal cover

Movie: Apoorva Raagangal (1975)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: Vani Jayaram and B. S. Sasirekha

Added Date: Feb 11, 2022

பெண்: கேள்வியின் நாயகனே.ஏ… இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா கேள்வியின் நாயகனே.ஏ… இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா

பெண்: இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம் எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம்

பெண்: கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா

பெண்: பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும் கன்று பால் அருந்தும் போதா காளை வரும் சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்

பெண்: சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் கொஞ்சம் சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம் தாலிக்கு மேலும் ஒரு தாலி உண்டா வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா கதை எப்படி அதன் முடிவெப்படி கதை எப்படி அதன் முடிவெப்படி

பெண்: கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா

பெண்: தலைவன் திருச்சாலூர் வந்துவிட்டான் மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான்..ஆன்.. தேடுகின்றான் தேடுகின்றான் தேடுகின்றான் ஹான்..ஆன்

பெண்: தலைவன் திருச்சாலூர் வந்துவிட்டான் மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான் அலமேலு அவன் முகத்தை காண்பாளோ மங்கை அவனோடு திருமலைக்குச் செல்வாளோ… செல்வாளோ செல்வாளோ

பெண்: கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு
பெண்: கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு
பெண்: பதில் ஏதய்யா

பெண்: கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா

பெண்: ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்
பெண்: பார்த்துக்கொண்டால்

பெண்: ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால் அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன

பெண்: இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன

பெண்: பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே
பெண்: நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே

பெண்: பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே
பெண்: நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே

பெண்: கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன
பெண்: உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன

பெண்: கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன
பெண்: உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன

பெண்: உடல் எப்படி

பெண்: ஒன்றில் இருந்தாற்படி

பெண்: மனம் எப்படி

பெண்: நீ விரும்பும் படி

பெண்: கேள்வியின் நாயகியே இந்தக் கேள்விக்கு பதில் ஏதம்மா

பெண்கள்: இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம்

பெண்: பழனி மலையிலுள்ள வேல் முருகா சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா

பெண்: பழனி மலையிலுள்ள வேல் முருகா சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா

பெண்: பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா

பெண்: பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா திருமுருகா…திருமுருகா..