Lyricist Yugabharathi

காதல் ஆராரோ பாடல் வரிகள்

காதல் ஆராரோ காதல் ஆராரோ
கண்ணால் சொன்னாயே பெண்ணே நீ யாரோ

மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே….ஏ…..
உன்னுள் நானே வெளியே தேடாதே
மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே….ஏ…..
உன்னுள் நானே வெளியே தேடாதே

காதல் ஆராரோ காதல் ஆராரோ
கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ

தரையில் மீன்கள் கண்கள் ஆனதே….ஏ….
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே
தரையில் மீன்கள் கண்கள் ஆனதே….ஏ….
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே

மனசு மனசு இன்று வலையோசை ஆனதே…..ஏ….
கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே

மனசு மனசு இன்று வலையோசை ஆனதே….ஏ….
கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே…

இணைவதனால் இதழ் இணப்பதனால் இந்த முத்தம் தீராதே
நனைவதனால் மழை நனைப்பதனால் நதி குற்றம் கூறாதே
காம்பில்லாமல் பூக்குமே காதல் பூக்கள்தான்…

காதல் ஆராரோ காதல் ஆராரோ கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ
எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்
திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்…

எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்
திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்

தொடங்கிடவும் அலை அடங்கிடவும் ஒரு ஜென்மம் போதாதே
பிரிவதனால் உயிர் முடிவதனால் இந்த காதல் சாகாதே
நீயில்லாத வாழ்க்கையே தேவையில்லையே

காதல் ஆராரோ காதல் ஆராரோ
கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ

மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே…ஏ…
உன்னுள் நானே வெளியே தேடாதே…

Movie: Narasimha
Lyrics: Yugabharathi
Music: Mani Sharma