ஆனந்தம் ஆனந்தம் பாடல் வரிகள்
ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு
ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு
வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு
தென் பொதிகை மேகங்களே இங்கு வந்து சேருங்கள்
என் தம்பி வந்த வேளையில் தங்க சாரல் வீசுங்கள்
ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு
வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு
ராமனுக்காக பதினான்கு ஆண்டு லெட்சுமணன் தூங்கல
நன்றியை காக்க எனக்கொரு வாய்ப்பு வருமா தோணல
தம்பிக்கு ஒருவன் தலையை கொடுத்தான் ஆறே நாளுல
அப்படி எனக்கொரு யோகம் வருமா அதுதான் தோணல
உலகத்தை எழுதட்டும் உங்க பங்குக்கு
என் உயிர் ஒன்றும் பெரிதல்ல உங்க அன்புக்கு
கண்ணுபட போகுதய்யா நம் அன்புக்கு
தாயை சுத்தி போட சொல்ல வேணும் ரெண்டு பேருக்கு
என் ஆயுள்தானே காணிக்கை அன்னை என்ற சாமிக்கு
ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு
வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு
ஜென்மங்கள் மீது நம்பிக்கை இல்லை ஆனால் சொல்கிறேன்
இன்னொரு ஜென்மம் இருந்தால்
உன்னையே உறவாய் கேக்குறேன்
தம்பியின் கனவு நிச்சயம் பலிக்கும்அண்ணன் சொல்கிறேன்
இன்னொரு பிறவியில் நீ எனக்கு அண்ணன் வரமாய் கேக்குறேன்
வானம் போலே உந்தன் தேகம் கருத்திருக்கு
ஆனால் அள்ளி அள்ளி தந்த கரம் சிவந்திருக்கு
தம்பி சின்னப் பிள்ளை இல்லை மீசை இருக்கு
ஆனால் உப்பு மூட்டை சுமக்கத்தான் ஆசை இருக்கு
என் ஜீவன் போன்ற அண்ணனே தேதி வேண்டும் பூஜைக்கு
ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு
வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு
தென் பொதிகை மேகங்களே இங்கு வந்து சேருங்கள்
என் தம்பி வந்த வேளையில் தங்க சாரல் வீசுங்கள்
ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு
வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு…
Movie: Kannupada Poguthaiya
Lyrics: Vairamuthu
Music: S. A. Rajkumar