Lyricist Na. Muthukumar

சுத்திப்போட வேணாமா பாடல் வரிகள்

சுத்திப்போட வேணாமா கண்ணு பட்டு போச்சு 
இந்த ஜோடி சூப்பர்ன்னு ஊருக்குள்ள பேச்சு

வயலுக்குள் போற சனம் எல்லாம் 
பச்சசனம் எல்லாம் பச்ச நெல்லாக 
நம்ம பேரை நடவு செய்யுதய்யா

சந்தையிலேடும் கூட்டம் எல்லாம் துட்டு இல்லாம 
நம்ம சேதி வாங்கி போகுதையா

அந்த ஆத்தங்கரையிலே களத்து மேட்டுல 
நம்ம கதைய பேசி தான் காத்தே வீசுது

சுத்திப்போட வேணாமா கண்ணு பட்டு போச்சு 
இந்த ஜோடி சூப்பர்ன்னு ஊருக்குள்ள பேச்சு

மகளா மருமகளா என் வீட்டுக்கு வருவ 
விளக்கா குத்து விளக்கா நீ வெளிச்சம் வீசுவ

புருஷன் தோளில நான் ஊஞ்சல் ஆடுவேன்
புகுந்த வீட்டுக்குள்ள நான் புண்ணியம் சேமிப்பேன்

அழகா என்ன அதட்டி நீ கட்டளை போடுவ 
குளிச்சா தலை துவட்டி நீ முத்தமும் வாங்குவ

தெனமும் தெனமும் நான்தான் வந்து வெத்தல மடிக்கணும் 
பாதி கடிச்சி நீ தான் மிச்சம் எனக்கு கொடுக்கணும்
அடி இப்படி ஒரு ஜோடியானு உலகமும் கண்ணு வைக்கணும்

சுத்திப்போட வேணாமா கண்ணு பட்டு போச்சு 
இந்த ஜோடி சூப்பர்ன்னு ஊருக்குள்ள பேச்சு

அடியே இளம் கொடியே உன் மடியில் இடம் கொடு 
முடிஞ்சா உன் மார்பில் கொஞ்சம் முனங்க வழி கொடு

ஆ இரவு நேரம் வந்தா உன் மெத்தையில் இடம் கொடு 
விடியும் நேரம் ஆனா என் சேலைய நீ கொடு

கனியே மச்ச கனியே உன் கன்னத்தின் ருசி கொடு
கடைஞ்ச வெள்ளி சிலையே உன் கழுத்தில் மனம் கொடு

உதட்டில் கொடுத்த முத்தம் அத திருப்பி தான் கொடு 
வெட்கமும் எனக்கு வந்தா நீ இரண்டு தான் கொடு

எங்க அப்பன் ஆத்தா ரெண்டு பேருக்கும 
ஆளுக்கொன்னா பெத்து கொடு

சுத்திப்போட வேணாமா கண்ணு பட்டு போச்சு 
இந்த ஜோடி சூப்பர்ன்னு ஊருக்குள்ள பேச்சு

வயலுக்குள் போற சனம் எல்லாம் பச்ச நெல்லாக 
நம்ம பேரை நடவு செய்யுதய்யா

சந்தையிலே கூடும் கூட்டம் எல்லாம் துட்டு இல்லாம 
நம்ம சேதி வாங்கி போகுதையா

அந்த ஆத்தங்கரையிலே களத்து மேட்டுல 
நம்ம கதைய பேசி தான் காத்தே வீசுது

சுத்திப்போட வேணாமா கண்ணு பட்டு போச்சு 
இந்த ஜோடி சூப்பர்ன்னு ஊருக்குள்ள பேச்சு…

Movie: Ayya
Lyrics: Na. Muthu Kumar
Music: Bharadwaj

Leave a Reply