Engae Enathu Kavithai Song Lyrics in Tamil
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதோ அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ……
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த
முகத்தை மனம் தேடுதே வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலா் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த
காதலனை உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பாா்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்
பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று
உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த
நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று
உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த
நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
ஒரே பாா்வை அட ஒரே வாா்த்தை அட ஒரே
தொடுதல் மனம் ஏங்குதே முத்தம் போடும்
அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும்
என்று ஏங்குதே
வோ்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று ஒட்டும்
என்று மனம் ஏங்குதே முகம்
பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே கேட்குதே...
பாறையில் செய்தது என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
Movie: Kandukondain Kandukondain
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman
0 Comments