Lyricist Vaali

அடி பூங்குயிலே பாடல் வரிகள்

அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு  
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு  
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

யாரிடத்தில் உன் மனசு போச்சு 
நூல போல உன் உடம்பு ஆச்சு
அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு 
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு 
யாரிடத்தில் உன் மனசு போச்சு 
நூல போல உன் உடம்பு ஆச்சு

வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு

பூங்குயிலே பூங்குயிலே கேளு 
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

ஆத்தங்கரை அந்தப்புறம் ஆக்கி கொள்ளவா… 
அந்த அக்கரைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா

மாமன் கையில் பூவை தந்து சூடி கொள்ளவா…
அடி ஆசைஎன்னும் ஊஞ்சல் கட்டி ஆடி கொள்ளவா

சொல்லு சொல்லு திட்டம் என்ன சொல்லுவது கஷ்டமா 
பொத்தி பொத்தி வச்சதென்ன என்ன என்னவோ இஷ்டமா

கூவாம கூவுறியே கூக்கூ கூக்கூ பாட்டு மாட்டாம மாட்டிபுட்ட
சொக்கு பொடி போட்டு

யாரிடத்தில் உன் மனசு போச்சு 
நூல போல உன் உடம்பு ஆச்சு
பூங்குயிலே பூங்குயிலே கேளு 
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

ஊரை எல்லாம் சுத்தி வந்த ஒத்தக்கிளியே 
இப்போ ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே…

சொந்த பந்தம் யாரும் இன்றி வந்த கிளியே.. 
ஒரு சொந்தம் இப்போ வந்ததென்ன வாசல் வழியே

வேரு விட்ட ஆலம் கன்னு வானம் தொட பாா்க்குது 
வானம் தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது

பூ பூவா பூக்க வச்ச மாமன் அவன் யாரு 
பாடுகிற பாட்டுல தான் நீயும் அதை கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு

பூங்குயிலே பூங்குயிலே கேளு 
நீ பாட்டெடுத் காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு 
நூல போல உன் உடம்பு ஆச்சு

வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு 
வாய விட்டு போனதென்ன பேச்சு

பூங்குயிலே பூங்குயிலே கேளு 
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு…

Movie: Aranmanai Kili
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja

Leave a Reply