Lyricist Vaali

ராத்திரியில் பாடும் பாட்டு பாடல் வரிகள்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு
ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு

போடு நிலாச் சோறு என் பொன்னுமணி தேரு
கூட வந்து சேரு நான் சொட்டும் கனிச் சாறு

ஹே ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு
ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு

கள்ளழகர் வைகை ஆற்றில் கால வைக்கும் நல்ல நாளில்
எட்டு பட்டி ஊரு சனம் கட்டுச் சோறு கட்டி வரும்

சொக்கனுக்கு மீனாள் போல தக்க துணை வாச்சதாலே
சின்னஞ்சிறு ஜோடி எல்லாம் சித்திரையில் இங்கு வரும்

உன் மேல தான் ஆச வச்சேன் வேறெதுக்கு மீசை வச்சேன்
என் புருஷன் நீயாகத்தான் போன சென்மம் பூச வச்சேன்

உன்னோடு தான் நானும் கூட என்னோடு தான் நீ கூட
போடு முந்தானை ஹே

ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு
ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு

கூட வந்து சேரு நான் சொட்டும் கனிச் சாறு
ஆ போடு நிலாச் சோறு என் பொன்னுமணி தேரு

எல்லோருக்கும் எழுதி வச்சான் எங்களைத்தான் கட்டி வச்சான்
பொன்ஜாதியோ பூன்தோரணம் நானோ ரொம்ப சாதாரணம்

வெண்ணிலவ மேகம் போல என்ன அவ மூடி வைப்பா
மத்தவங்க கண்ணு பட்டா தத்தளிப்பா தான் தவிப்பா

ஊருக்கவ ராணி போல எனக்கு அவ அம்மன் போல
சொல்ல போனா என்ன போல பாக்யவான் யாரும் இல்லை

தாரம் கூட தாயைப் போல ஈடு சொல்ல யாரும் இல்லை
எல்லாம் என் யோகம்

ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு
ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு

போடு நிலாச் சோறு என் பொன்னுமணி தேரு
கூட வந்து சேரு நான் சொட்டும் கனிச் சாறு

ஹே ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு
ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு…

Movie: Aranmanai Kili
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja