Yaaradi Neril Thondrum Song Lyrics
Movie: Adangathey (2018)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Uma Devi
Singers: Sathyaprakash
Added Date: Feb 11, 2022
ஆண்: யாரடி யாரடி நேரில் தோன்றும் தேவதை பார்வையின் தீண்டலில் பாதை நூறு ஆனதே
ஆண்: வாழ்விலே நீ இனி ஆயுள் காலா ஞாபகம் காதலே வானம் போல் நீழுகின்றதே
ஆண்: ஒலிகள் ஆடை மூடி வந்ததே என் கோப தாபம் மாறுதே மனதின் ஆழம் தேடி தங்குதே உயிர் பொங்குதே.
ஆண்: யாரடி யாரடி நேரில் தோன்றும் தேவதை பார்வையின் தீண்டலில் பாதை நூறு ஆனதே
ஆண்: வானமென நான் ஆனேன் மேகமாய் மேல் ஆனேன் பூமியின் தாகம் தீரவே வானமழை போல் ஆனேன்
ஆண்: நீர் தொடும் நீரானாய் நான் தேடும் வேரானாய் நீர்க்குமிழ் போலே நானாகி நீந்துகிற சேல் ஆனேன்
ஆண்: தடைகளெல்லாம் உடைகிறதே மறைகிறதே மழை துளியில் மலைகளெல்லாம் கரைகிறதே
ஆண்: மனம் காலம் நேரம் தூரம் மீறி வானம் தாண்டி ஓடுதே அடி நீரும் நெல்லும் போல நான் சேரவே அடி ஏனடி
ஆண்: யாரடி யாரடி நேரில் தோன்றும் தேவதை பார்வையின் தீண்டலில் பாதை நூறு ஆனதே
ஆண்: காதலின் நியாயங்கள் மாலையில் பூக்கிறதே ஆசைகளின் எல்லை மீறியே ஆறு கடல் ஓடுதே
ஆண்: வேதங்கள் ஒன்றாக ஓதிடும் அன்பெல்லாம் காதலின் தூது போலவே காலமகள் வந்தாலே
ஆண்: திரைகளெல்லாம் மறைகிறதே ஒளிர்கிறதே இரு விழியில் உலகமெல்லாம் விடுகிறதே.
ஆண்: உடல் யாவும் மீறி தூரம் கூடி ஜீவன் ஏகம் ஆகுதே அட தோயும் நெஞ்சில் தோழி வண்ணம் பாயுதே அது ஏனடி
ஆண்: யாரடி யாரடி நேரில் தோன்றும் தேவதை பார்வையின் தீண்டலில் பாதை நூறு ஆனதே..