Lyricist Vairamuthu

உளுந்து வெதக்கையிலே பாடல் வரிகள்

ஹே லே லே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே லே ஹே லே ஹே
ஹே லே லே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே லே ஹே லே ஹே

உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்..
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

வெக்கப்படப்பில் கவுளி கத்த வலது பக்கம் கருடன் கொத்த
தெருவோரம் நெரகுடம் பாா்க்கவும் மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே

ஒரு பூக்காாி எதுக்க வர பசும் பால்மாடு கடக்கிறதே இனி என்னாகுமோ
ஏதாகுமோ இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ

உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

அனிச்ச மலரழகே அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவும் குயிலே
நீ எட்டியெட்டிப் போகயில விட்டுவிட்டுப் போகும் உயிரே

அனிச்ச மலரழகே அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவும் குயிலே
நீ எட்டியெட்டிப் போகயில விட்டுவிட்டுப் போகும் உயிரே

ஒரு தடவ இழுத்து அணைச்சபடி உயிா் மூச்ச நிறுத்து கண்மணியே
உன்முதுகு தொலைச்சி வெளியேற இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே

மழையடிக்கும் சிறு பேச்சு வெயிலடிக்கும் ஒறு பாா்வை
உடம்பு மண்ணில் புதையற வரையில் உடன் வரக் கூடுமோ

உசிா் என்னோட இருக்கயில நீ மண்ணோட போவதெங்கே
அட உன் சேவனே நானில்லையா கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமய்யா

குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே

ஒரு கண்ணில் நீா் கசிய உதட்டு வழி உசிா் கசிய
ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே

அட ஆத்தோட விழுந்த இலை அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே

குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசுவாயா
கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்துவாயா…

Movie: Mudhalvan
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman