Udakkachatham Song Lyrics

Movie: Thanga Manasukkaran (1992)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: உடுக்க சத்தம் கேட்ட தாயி ஓடி வந்து நில்லு நில்லு.

ஆண்: தடுத்து நிக்கும் வேலி எல்லாம் தகர்க்க அருள் வாக்குச் சொல்லு.

ஆண்: வானம் தொட்டு பூமி எங்கும் வாழும் சக்தி மாரியம்மா.

ஆண்: மானம் மரியாதைகளை காத்து நிக்க வாடியம்மா.

ஆண்: நாளும் உன்ன பூஜை செய்ய நல்ல பதில் தாருமம்மா…

ஆண்: நெனச்ச போது அணைக்க வேணும் தவிச்ச தாகம் தணிக்க வேணும் படைச்ச தாயி மனசு வந்து எறங்கி நீயும் வழங்க வேணும்.

ஆண்: தீய மிதிப்போம் தீச் சட்டி எடுப்போம் முன்னம் செய்த வினை தீர வழி கேட்டு அருள் பெய்து துயர் தூரம் என ஓட்டு தாய மதிப்போம் தாய் பேர துதிப்போம் தங்கத் தாய் புகழ பாடும் இந்தப் பாட்டு இந்த சேய் படிக்கத் தீவினைய ஓட்டு சக்தி சக்தி தரும் வெற்றி வெற்றி என் தாயே சரணம் அருள் காட்டு சக்தி சக்தி தரும் வெற்றி வெற்றி என் தாயே சரணம் அருள் காட்டு

குழு: தீய மிதிப்போம் தீச் சட்டி எடுப்போம் முன்னம் செய்த வினை தீர வழி கேட்டு அருள் பெய்து துயர் தூரம் என ஓட்டு

ஆண்: ஆச வெச்ச பாவத்துக்கு ஆடுகிறேன் பம்பரமா பாசம் வெச்ச பாரத்துக்கு பாடு பட்டேன் எந்திரமா ஒம் மேல சாட்சி வெச்சு ஒண்ணான ஜோடி ஊராரு கண்ணு பட்டு ரெண்டானது பொன்னான நெஞ்சுக்குள்ளே உண்டான மோகம் பொல்லாங்கு சொல்லும் பழி என்றானது ஒண்ணா ரெண்டா சுமை தாங்கணுமா உள்ளம் ரெண்டும் இன்னும் ஏங்கணுமா கண்ணால் கண்டும் மௌனம் ஏண்டியம்மா முன்னால் வந்தால் இன்னல் தீருமம்மா அடி ஆதி முதல் அந்தம் கண்ட மாரி பல நீதி சொல்லி வாழ வைக்கும் தேவி

குழு: தீய மிதிப்போம் தீச் சட்டி எடுப்போம் முன்னம் செய்த வினை தீர வழி கேட்டு அருள் பெய்து துயர் தூரம் என ஓட்டு

ஆண்: ஏழைக்கும் பாழைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் காவல் நிற்கும் மாரி

குழு: கருமாரி

ஆண்: வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நான் உண்டு பார் என்று சாட்சி சொல்லும் தேவி

குழு: அலங்காரி

ஆண்: ஏழைக்கும் பாழைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் காவல் நிற்கும் மாரி

குழு: கருமாரி

ஆண்: வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நான் உண்டு பார் என்று சாட்சி சொல்லும் தேவி

குழு: அலங்காரி

ஆண்: அன்புக்கு அன்பு சொல்லும் காளி நீ துன்பத்த வெல்ல வரும் சூலி நீ தாய் எந்தன் முத்து மாரி. நியாயங்கள் சொல்லும் தேவி.

குழு: தாய் எந்தன் முத்து மாரி. நியாயங்கள் சொல்லும் தேவி.