Athaimadi Methaiyadi cover

Movie: Athaimadi Methaiyadi (1989)
Music: S. R. Vasu
Lyricists: Vaali
Singers: K. S. Chitra

Added Date: Feb 11, 2022

பெண்: பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது கண் விழி இன்னொரு காவியம் எய்தது காலம் கனிந்ததோ

பெண்: சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது செந்தமிழ் பொங்கிட சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ

பெண்: கால் கொண்டு கை கொண்டு உலவ இரு கண்ணோடு மின்னல்கள் குலவ நடனம் புரியும் பதுமை இது எங்கேயும் இல்லாத புதுமை

பெண்: சலங்கை சத்தம்தான் குலுங்கும் நித்தம்தான் மகிழ்ச்சி வெள்ளம்தான் மலிந்த உள்ளந்தான்

பெண்: பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது கண் விழி இன்னொரு காவியம் எய்தது காலம் கனிந்ததோ

பெண்: சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது செந்தமிழ் பொங்கிட சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ

பெண்: {பநிபநிஸா
ஆண்: ஆஹ்ஹா
பெண்: நிஸநிஸக
ஆண்: ஆஹ்ஹா} (2)
பெண்: ஸாஸநிநி நிநிநி ஸாஸஸாஸக…
ஆண்: தானன நானன்நாணன நானன்நானன னா

பெண்: காட்டுக்குள் கூட்டுக்குள் துயர் பாட்டுக்கள் பாடிய குயில் கூட்டை துறந்ததோ விண்ணுக்கும் மண்ணுக்கும் அது கண்ணுக்கு எட்டிய வரை பாடிப் பறந்ததோ

பெண்: இனி உலகம் முழுதும் தனது என உலவி திரியும் மனது இது சுகங்கள் விளையும் பொழுது இந்த இயற்க்கை அனைத்தும் அழகு

பெண்: சலங்கை சத்தம்தான் குலுங்கும் நித்தம்தான் மகிழ்ச்சி வெள்ளம்தான் மலிந்த உள்ளந்தான்

பெண்: பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது கண் விழி இன்னொரு காவியம் எய்தது காலம் கனிந்ததோ

பெண்: சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது செந்தமிழ் பொங்கிட சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ

பெண்: ……….
ஆண்: ………

பெண்: பூமிக்குள் மேகங்கள் வர மேகங்கள் இறங்கல் தர பூக்கள் மலர்ந்ததோ தூறல் சாரல் என தூவும் பனித்துளியில் தேகம் சிலிர்த்ததோ

பெண்: முன்பு இரவும் பகலும் தனிமை இனி இளமை முழுதும் இனிமை நெஞ்சை விலகி நடக்கும் கவலை இனி விழிகள் எழுதும் கவிதை..

பெண்: சலங்கை சத்தம்தான் குலுங்கும் நித்தம்தான் மகிழ்ச்சி வெள்ளம்தான் மலிந்த உள்ளந்தான்

பெண்: பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது கண் விழி இன்னொரு காவியம் எய்தது காலம் கனிந்ததோ

பெண்: சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது செந்தமிழ் பொங்கிட சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ

பெண்: கால் கொண்டு கை கொண்டு உலவ இரு கண்ணோடு மின்னல்கள் குலவ நடனம் புரியும் பதுமை இது எங்கேயும் இல்லாத புதுமை

பெண்: சலங்கை சத்தம்தான் குலுங்கும் நித்தம்தான் மகிழ்ச்சி வெள்ளம்தான் மலிந்த உள்ளந்தான்

பெண்: பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது கண் விழி இன்னொரு காவியம் எய்தது காலம் கனிந்ததோ

பெண்: சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது செந்தமிழ் பொங்கிட சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ…