Lyricist Vairamuthu

பற பற பாடல் வரிகள்

பற பற பறவை ஒன்று கர கர கரையில் நின்று

கண்ணீரில் கடல் அலை நனைக்குதே

கட கட கடலுக்குள்ளே பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே

என் தேவன் போன திசையிலே ஜீவன் சேர்த்து அனுப்பினேன் 
என் ஜீவன் வந்து சேருமா தேகம் மீண்டும் வாழுமா  
இதோ எந்தன் கண்ணீர் அந்த அலையில் 
சேரும் அலை மறுபடி உன்னிடம் வருமா

பற பற பறவை ஒன்று கர கர கரையில் நின்று

கண்ணீரில் கடல் அலை நனைக்குதே

கட கட கடலுக்குள்ளே பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே

தண்ணீரில் வலையும் நிற்கும் 
தண்ணீரா வலையில் நிற்கும் 
என் தேவன் எப்போதும் திரிகிறான் 

காற்றுக்கு தமிழும் தெரியும் 
கண்ணாளன் திசையும் தெரியும் 
கட்டாயம் துன்பம் சொல்லும் மறக்கிறான்

உனது வேர்வையின் மார்புக்குள் 
பிசுக்கு பிசுக்கென்று கிடக்குதே 
ஈர வேர்வைகள் தீரும் முன் எனது உயிர்பசை காய்வதா

வானும் மண்ணும் கூடும் போது
நானும் நீயும் கூடாமல் வாழ்வது கொடுமை

பற பற பறவை ஒன்று கர கர கரையில்
நின்று கண்ணீரில் கடல் அலை நனைக்குதே
கட கட கடலுக்குள்ளே பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே

ஊரெங்கும் மழையும் இல்லை 
வேரெங்கும் புயலும் இல்லை 
என்றாலும் நெஞ்சில் இடி இடிக்குதே 

கண்ணாளன் நிலைமை என்ன கடலோடு பார்த்து சொல்ல 
கொக்குக்கும் நாரைக்கும் கண் அலையுதே

நீரின் மகன் எந்தன் காதலன் நீரின் கருணையில் வாழ்வான் 
இன்று நாளைக்குள் மீளுவான் 
எனது பெண்மையை ஆளுவான் 

என்னை மீண்டும் தீண்டும் போது கடல் தேவன்
இருமுறை முதலிரவுகள் தருவான்

பற பற பறவை ஒன்று கர கர கரையில்
நின்று கண்ணீரில் கடல் அலை நனைக்குதே

கட கட கடலுக்குள்ளே பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே

என் தேவன் போன திசையிலே ஜீவன் சேர்த்து அனுப்பினேன் 
என் ஜீவன் வந்து சேருமா தேகம் மீண்டும் வாழுமா  
இதோ எந்தன் கண்ணீர் அந்த அலையில் 
சேரும் அலை மறுபடி உன்னிடம் வருமா

பற பற பறவை ஒன்று கர கர கரையில் நின்று

கண்ணீரில் கடல் அலை நனைக்குதே

கட கட கடலுக்குள்ளே பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே…

   Movie: Neerparavai
Lyrics: Vairamuthu
Music: N. R. Raghunanthan

Leave a Reply