Padu Nilave Song Lyrics

Movie: Udhaya Geetham (1985)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

பெண்: { பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர } (2) உன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன் பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர

பெண்: நீ போகும் பாதை என் பூங்காவனம் நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம் ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ என் வீடு வாராமல் ஏன் போகுமோ

பெண்: கைதான போதும் கை சேரவேண்டும் உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும் என் ஜென்மமே ஈடேறவே

ஆண்: பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே உன் பாடலை நான் கேட்கிறேன் பாமாலையை நான் கோர்க்கிறேன் பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

ஆண்: ஊரெங்கும் போகும் என் ராகங்களே உன் வீடு தேடும் என் மேகங்களே பூ மீது தேன் தூவும் காதல் வரம் என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்

ஆண்: காவேரி வெள்ளம் கை சேர துள்ளும் ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும் காதல் நிலா தூதாகுமே பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

பெண்: உன் பாடலை நான் கேட்கிறேன்

ஆண்: பாமாலையை நான் கோர்க்கிறேன்

பெண்: பாடும் நிலாவே

ஆண்: தேன் கவிதை

ஆண் &
பெண்: பூ மலரே