Lyricist Vairamuthu

ஓ வெண்ணிலா என் மேல் கோபம் ஏன் பாடல் வரிகள்

ஓ வெண்ணிலா என் மேல் கோபம் ஏன்
ஆகாயம் சேராமல் தனியே வாழ்வது ஏனோ ஏனோ ஏனோ
ஓ காதலே உன் பேர் மௌனமா
நெஞ்சோடு பொய் சொல்லி நிமிடம் வளர்ப்பது சரியா சரியா சரியா

தொலைவில் தொடு வான் கரையை தொடும் தொடும்
அருகில் நெருங்க விலகி விடும் விடும்
இருவர் மனதில் ஏனொ அடம் அடம்
ஓருவர் பார்த்தால் மூடும் உடைபடும்

ஏ பெண்மையே கர்வம் ஏனடி வாய் வரை வந்தாலும்
வார்தை மரிப்பது ஏனொ ஏனொ ஏனொ
ஏ ஸ்வாசமே உடல் மேல் ஊடலா

என் ஜீவன் தீண்டாமல் வெளியே செல்லாததே
நீ வெற்றி கொள்ள உன்னை தொலைக்காதே
யார் சிரித்தாலும் பாலைவனங்கள் மலரும்

ஓ காதலா உன் பேர் மௌனமா சொல்லொன்று இல்லாமல்
மொழியும் காதலன் இல்லை இல்லை இல்லை

ஓ காதலா ஓர் வார்த்தை சொல்லடா
முதல் வார்த்தை நீ சொன்னால்

நான் மறு வார்த்தை சொல்வேன்
நான் தினம் சொல்வேன் எந்தன் காதல் சொல்வேன்
ஊடலில் அழியாமல் வாழும் காதல் சொல்வேன்…

Movie: Kushi
Lyrics: Vairamuthu
Music: Deva