Lyricist Panchu Arunachalam

மருமகளே மருமகளே பாடல் வரிகள்

மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழ வந்த திருமகளே

ஹேய் மன்னாதி மன்னருடன் நூறாண்டு வாழ்க
பொன்னோடு பூவும் கொண்டு ஊர் போற்ற வாழ்க

எல்லோரும் போற்றுகிற ராஜாதி ராஜா
எப்போதும் அவர் மனசில் நீதான் ராணி

மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழ வந்த திருமகளே…

சொந்தமுள்ள மாமனுக்கு சொந்தம் என நீ வளர்ந்தாய்
அன்பு கொண்டு ஆதரித்து அடியெடுத்து வீடு வந்தாய்

தங்கத்திலே பொட்டு வெச்ச குத்து விளக்கே
தங்க வந்த வீட்டுக்கு நீ காவல் இருப்பாய்

தங்கத்திலே பொட்டு வெச்ச குத்து விளக்கே
தங்க வந்த வீட்டுக்கு நீ காவல் இருப்பாய்

வந்தாரை வாழ வைக்கும் எங்க மகராஜனுக்கு
வாழையடி வாழை என வாழ்வு தர வந்தவளே

என்னைக் காத்திட வந்தவள் நீயே
எங்கள் வாழ்வினில் ஆனந்தம் கூட

மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழ வந்த திருமகளே…

மன்னாதி மன்னருடன் நூறாண்டு வாழ்க
பொன்னோடு பூவும் கொண்டு ஊர் போற்ற வாழ்க

எல்லோரும் போற்றுகிற ராஜாதி ராஜா
எப்போதும் அவர் மனசில் நீதான் ராணி

மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழ வந்த திருமகளே…

ஊரை எல்லாம் வாழ வைத்த எங்க மொதலாளி
பேரைச் சொன்னால் மழையும் பெய்யும் தங்க மொதலாளி

கருணையுடன் உதவி செய்யும் கர்ண மகராஜா
கரும்பு போல மனசு கொண்ட தெய்வ மகனா

கருணையுடன் உதவி செய்யும் கர்ண மகராஜா
கரும்பு போல மனசு கொண்ட தெய்வ மகனா

கண்ணால அன்பு தந்து கையால அரவணைச்சு
பூவாலே மஞ்சம் இட்டு தாயாக வாழ வைப்பாய்
என்னைக் காத்திட வந்தவள் நீயே
எங்கள் வாழ்வினில் ஆனந்தம் கூட

மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழ வந்த திருமகளே

மன்னாதி மன்னருடன் நூறாண்டு வாழ்க
பொன்னோடு பூவும் கொண்டு ஊர் போற்ற வாழ்க

எல்லோரும் போற்றுகிற ராஜாதி ராஜா
எப்போதும் அவர் மனசில் நீதான் ராணி

மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழ வந்த திருமகளே…

Movie: Enga Muthalali
Lyrics: Panchu Arunachalam
Music: Ilaiyaraaja