Kanneeraiyum Senneeraiyum Song Lyrics
Movie: Yer Munai (1992)
Music: L. Vaithiya Nathan
Lyricists: Gangai Amaran
Singers: Deepan Chakravarthi
Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணீரையும் செந்நீரையும் தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே வெந்நீரையா ஊற்றினேன் என் மீது ஏன்தான் கோபம் அம்மா தாய் போன்ற என் பூமியே சதி செய்ததோ சாமியே
ஆண்: கண்ணீரையும் செந்நீரையும் தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே வெந்நீரையா ஊற்றினேன்
ஆண்: ஊர் வாழ வேண்டி தான் வாழும் ஜாதி உயராததென்ன சமுதாய நீதி உழைக்கின்ற கை ஓய்வதோ…ஓஓஒ. உழைக்கின்ற கை ஓய்வதோ
ஆண்: ஆதாரம் இல்லை ஆகாரம் இல்லை அநியாயமாய் காய்வதோ..ஓஓ. அலை மோதினால் சின்ன தோணி என்ன ஆகும்
ஆண்: கண்ணீரையும் செந்நீரையும் தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே வெந்நீரையா ஊற்றினேன்.
ஆண்: உரம் வாங்கி போட்டால் தரமாக இல்லை கடன் வாங்கி போட்டால் தீராத தொல்லை வெறும் வாயைத்தான் மெல்வதோ.ஓஓஒ. வெறும் வாயைத்தான் மெல்வதோ
ஆண்: விலை மாறவில்லை நிலை மாறவில்லை பரிதாபமாய் ஆனதோ வேர்வைகளே உங்கள் தாகம் என்று தீரும்
ஆண்: கண்ணீரையும் செந்நீரையும் தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே வெந்நீரையா ஊற்றினேன் என் மீது ஏன்தான் கோபம் அம்மா தாய் போன்ற என் பூமியே சதி செய்ததோ சாமியே…