Lyricist Yugabharathi

காதல் சிலுவையில் பாடல் வரிகள்

காதல் சிலுவையில் அறைந்தால் என்னை
தீயின் குடுவையில் அடைத்தால் கண்ணை
காதல் சிலுவையில் அறைந்தால் என்னை
தீயின் குடுவையில் அடைத்தால் கண்ணை

கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள்
உயிரும் உதிரும் போது உறவுகளும் வீணோ…
உலகம் இதுதானோ….

கழுகுகளின் கண்களிலே மரண பயம் இல்லை
ஊமைகளின் தாலாட்டை செவி உணர வாய்ப்பில்லை
புழுதியிலே இரத்தினமாய் இருந்தது ஒரு தொல்லை
பாவங்களை பாராமல் பழகியதனால் தொல்லை

தேவை பூமியை தினமும் தேனாக்கும்
கோபம் துயரங்களை சேர்க்கும்

கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள்

உயிரும் உதிரும் போது… உறவுகளும் வீணோ…
உலகம் இதுதானோ….

அவளுடைய கற்பனையை எழுத வழியில்லை
கூண்டுக்கிளி நான் ஆனேன் வெளிவரவும் வாய்ப்பில்லை
இவனுடைய உண்மைகளை உளர வழியில்லை
தோல்விகளின் வீடானேன் துணை வரவும் ஆளில்லை

வாழும் மானிடரின் சுமைகள் தீராது காலம் உறவுகளின் தீவு
கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள்

இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள்
உயிரும் உதிரும் போது… உறவுகளும் வீணோ… உலகம் இதுதானோ..

காதல் சிலுவையில் அறைந்தால் என்னை
தீயின் குடுவையில் அடைத்தால் கண்ணை
காதல் சிலுவையில் அறைந்தால் என்னை
தீயின் குடுவையில் அடைத்தால் கண்ணை

கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள்
உயிரும் உதிரும் போது உறவுகளும் வீணோ…
உலகம் இதுதானோ…

Movie: Subramaniapuram
Lyrics: Yugabharathi
Music: James Vasanthan