Perarasu

என்ன தவம் பாடல் வரிகள்

என்ன தவம் செஞ்சிபுட்டோம் அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்
பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா
வாழும் இடம் பொறந்த இடம் ஆகுமா

கானம் காய்ச்சி தீ புடிக்க கண்ணு ரெண்டும் நீர் இறைக்க
வீட நானும் கரைசேர்த்து போறேனே
சாமீ மேல பாரம் போட்டு வாரேனே

கண்ணே கற்பகமே கண்ணுக்குள்ள சொர்பணமே
தூங்காம அண்ணன்கூட எப்போதும் கூட இரு
எப்போதும் கூட இரு

என் தாயி ஒரு தாய பெத்தெடுத்தாளே
புது வாழ்வு அவ வாழ தத்து விட்டேனே
கருவீட்டில் பூத்துபுட்டோம்
வீட்டையுந்தான் மாத்திபுட்டோம்

அவதாரம் போல நீயும் அவதரித்தாயே
மருதாணி போல என்ன வளத்து விட்டாயே
செவந்த இடம் பொறந்த இடம் உதிர்ந்த இடம் புகுந்த இடம்

என்ன தவம் செஞ்சிபுட்டோம் அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்
என்ன தவம் செஞ்சிபுட்டோம் அண்ணன் தங்கை…

Movie: Thirupaachi
Lyrics: Perarasu
Music: Dhina