Lyricist Pa.Vijay

சின்ன மகராணியே பாடல் வரிகள்

சின்ன மகராணியே மகளாக வந்தாய்
சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய்
கை வீசும் ஜன்னல் நிலா நீ வந்த வேளை
வாழ்க்கை பாதை எங்கும் வரவேற்பு மாலை

எங்கள் வீட்டு கடிகாரத்தில் எல்லா நேரமும் இன்பம்
இனி உந்தன் பின்னால் உந்தன் அன்பால் எங்கள் உலகம் சுற்றும்

சின்ன மகராணியே மகளாக வந்தாய்
சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய்

பெண்ணுக்கென வாழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா
விட்டு தரும் குணம் இருந்தால் இலக்கியம் ஆகும் அம்மா
அனைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்கும் அம்மா
ஆசைகள் தான் வாழ்க்கை என்றால் அவஸ்தைகள் பிறக்கும் அம்மா

அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடிகிற காரியமா
அடி வார்த்தையை கொட்டிய பின்னால் அதை அள்ளிட கூடிடுமா
ரோஜா பூவும் நீயும் ஒன்றே இதழ்கள் இங்கே இதயம் எங்கே

சின்ன மகராணியே மகளாக வந்தாய்
சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய்

உன் தாயும் கேட்டாலே விண்மீன் வேண்டும் என்று
விண்மீன்கள் நான் தருவேன் விடியலை தருவாளா
ஊஞ்சலுக்கு கேட்டாலே வானவில் வேண்டும் என்று
வானவில்லை நான் தருவேன் வசந்தத்தை தருவாளா

உன் ஆசைகளை ஒரு நாளும் நான் மறுக்கவும் இல்லையடி
உன் தாயை நான் ஒரு நாளும் இங்கு வெறுக்கவும் இல்லையடி
எந்தன் தாயே என் முகம் பாரு உந்தன் தாய்க்கும் நல் வழி கூறு

சின்ன மகராணியே மகளாக வந்தாய்
சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய்
கை வீசும் ஜன்னல் நிலா நீ வந்த வேளை
வாழ்க்கை பாதை எங்கும் வரவேற்பு மாலை

எங்கள் வீட்டு கடிகாரத்தில் எல்லா நேரமும் இன்பம்
இனி உந்தன் பின்னால் உந்தன் அன்பால் எங்கள் உலகம் சுற்றும்

சின்ன மகராணியே மகளாக வந்தாய்
சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய்…

Movie: Priyasakhi
Lyrics: Pa. Vijay
Music: Bharadwaj