பாலிவுட்டை குலுங்க வைத்த பிரபல நடிகரின் குற்றச்சாட்டு...! கங்கனா ரனாவத் இப்படி செய்தாரா...!

கங்கனா ரனாவத் கடந்த 2014-ல் வெளியான ரிவால்வர் ராணி என்ற படத்தில் வீர் தாசுடன் நடித்திருந்தார்.

மும்பை,

சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் போன நடிகை கங்கனா ரனாவத். ஜெயம் ரவியின் தாம் தூம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகை கங்கனா ரனாவத்.

தனது சர்ச்சைக்குரிய கருத்துகளால் சினிமா மட்டுமல்லாது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்று வந்தார் கங்கனா ரனாவத்.

கங்கனா ரனாவத் கடந்த 2014-ல் வெளியான ரிவால்வர் ராணி என்ற படத்தில் வீர் தாசுடன் நடித்திருந்தார். படப்பிடிப்பின்போது உதட்டு முத்த காட்சியில் கங்கனா, வீர் தாசை முத்தமிட்டபோது உதட்டை கடித்ததால் அவருக்கு ரத்தம் வந்ததாக ஒரு தகவல் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான ஆலியா பட் மற்றும் ரன்வீர் கபூர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார். அதில், அந்த இந்தி நட்சத்திர ஜோடி பிரமாண்டமாக ஊரைக்கூட்டி திருமணம் செய்து கொண்டாலும், இருவரும் இப்போது வேறு வேறு மாடியில்தான் வசிக்கிறார்கள். ஆனால், வெளி உலகத்திற்கு சேர்ந்து இருப்பது போல் காட்டி கொள்கின்றனர்.

பணத்திற்காக திருமணம் செய்து கொண்டால் இப்படி தான் நடக்கும். நடிகையை அவர் காதலித்து திருமணம் செய்து கொள்ளவில்லை. மாபியா நெருக்கடியால் தான் திருமணம் செய்து கொண்டார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

நடிகர் சேகர் சுமனின் மகன் அத்யாயன் சுமன். இவர் 15 வருடங்களுக்கு முன்பு பாலிவுட்டில் அறிமுகமானார். 2008 ஆம் ஆண்டு நடிகை கங்கனா ரனாவத், பூஜாபட் இயக்கிய ராஸ் படத்தின் படப்பிடிப்பில் இருவரும் சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பு காதலாக மாறியது. இருவருக்கும் இடையிலான உறவு நீடித்தது.அடுத்த ஆண்டு 2009 இல் அவர்கள் பிரிந்தனர்.

ஆனால் 2017 ஆம் ஆண்டு அத்யாயன் சுமன் கங்கனா மீது கூறிய குற்றச்சாட்டுகள் பாலிவுட்டையே உலுக்கியது.

கங்கனா ரனாவத் தனக்கு மந்திரவாதியை வைத்து சூனியம் வைக்க முயன்றதாகவும், அவரை வசியப்படுத்த அசுத்த (மாதவிடாய்) இரத்தம் கலந்த உணவை அவருக்கு ஊட்டுவதாகவும் அத்யாயன் சுமன் குற்றம் சாட்டினார்.

மேலும் ஒரு நாள் இரவு 12 மணியளவில் கங்கனா கறுப்பு உடையில் பூஜை செய்து, சில மந்திரங்கள் சொல்லும்படி வற்புறுத்தி அறையில் அடைத்து வைத்ததாகவும் சுமன் குற்றம்சாட்டி இருந்தார். இது பாலிவுட் உலகையே நடுநடுங்க வைத்தது.

சமீபத்தில் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், நடிகர் அத்யாயன் சுமன் தனது அந்த குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விளக்கம் அளித்து உள்ளார்.

அந்த உறவை பற்றி பேசுவதற்கு நான் வருத்தப்படவில்லை. ஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதன் மறுபக்கம் மக்களுக்கு தெரியும்.

நான் ஒரு முறை அதுகுறித்து பேசினேன், மேலும் அது குறித்து விவாதிக்க விரும்பவில்லை என கூறினார்.