Lyricist Vairamuthu

ஏன் பெண்ணென்று பாடல் வரிகள்

ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிரித்தாய் என் உயிர் பூவை எரித்தாய்

முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய்
முறையா என்றேன் கண்கள் பறித்தாய் என் வலி தீர ஒரு வழி என்ன
என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன

ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய்

நீ சூடும் ஒரு பூ தந்தால் என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்
உன் வாயால் என் பேர் சொன்னால் உன் காலடியில் கிடப்பேன்

தூக்கத்தை தொலைத்தேனே துடிக்குது நெஞ்சம்
தலை போன சேவல் போல் தவிக்குது அங்கம்
இரண்டில் ஒன்று சொல்லிவிடு இல்லை நீயே கொள்ளியிடு

ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய்

நோகாமல் பிறர் காணாமல் உந்தன் ஆடை நுனி தொடுவேன்
என்ன ஆனாலும் உயிர் போனாலும் ஒரு தென்றல் என்றே வருவேன்

நீ என்னைப் பார்த்தால் தான் துடிக்குது உள்ளம்
நீ என்னைப் பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம்
இமயம் கேட்கும் என் துடிப்பு ஏனோ உனக்குள் கதவடைப்பு

ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிரித்தாய் என் உயிர் பூவை எரித்தாய்
முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய்

முறையா என்றேன் கண்கள் பறித்தாய் என் வலி தீர ஒரு வழி என்ன
என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன

ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய்…

Movie: Love Today
Lyrics: Vairamuthu
Music: Shiva