Mohan Raja Lyrics

யம்மாடியம்மா பாடல் வரிகள்

தா நன்னா னா தன நன்னா நன்னா னா
தா நன்னா னா தன நன்னா நன்னா நன்னா நனனே

தா நன்னா னா தன நன்னா நன்னா னா
தா நன்னா னா தன நன்னா நன்னா நன்னா நனனே

யம்மாடியம்மா சொல்லிட்டாளே சும்மா
கண்ணாடி போல மனச காட்டிட்டாலே யம்மா
அம்மாடியம்மா ஆடி போனேன் சும்மா
என்னோட மூச்சில் காத்தில் கொடுத்து விட்டேன் உம்மா

பொல்லாத ஆலமரம் சாச்சிடுச்சே வாழமரம்
கேக்காம கெடைச்சுடுச்சே உள்ளுக்குள்ள நெனச்ச வரம்

உன்னால நூறு தரம் சிரிக்கிறேன் நானும் தினம்
சொல்லாம நுழைஞ்சிடுச்சே எனக்கும் அந்த காதல் ஜுரம்

அவ கூந்தலுல தூங்கும் ஒரு பூவா மாற வேணும்
அவ கொல்லும் நெனப்பு எனக்கு
ஒரு நோவா மாற வேணும்

அவளது பூ வாசம் மனசுல தீ வீசும்
அட மழை நெனைப்பால கொடுக்குற ஜலதோஷம்
அடிக்கடி கண் பேசும் அதுதான் சந்தோசம்
அடியே அன்பால எழுதல இதிகாசம்

முத்தம் நான் கேட்டு பக்கம் போகையில்
புருவம் அருவாளா மாறி தொலைக்கும்
வேணாம் வம்புன்னு தூரம் போகையில்
உதடு ஹல்வாவ என்னை அழைக்கும்

அவ கூந்தலுல தூங்கும் ஒரு பூவா மாற வேணும்
அவ கொல்லும் நெனப்பு எனக்கு
ஒரு நோவா மாற வேணும்

வெறப்பு குறையாமா இருந்தேன் பல நாளா
உன்னை நான் பார்த்து விழுந்தேன் தலைகீழா
எதுக்கு பொறந்தேன்னு நெனைப்பேன் சில நேரம்
என்னை நீ பார்த்த எனக்கு அது போதும்

உள்ளங்கால சுத்த வைக்கிறா
உச்சம் தலைக்குள் ஏறி நிக்கிறா
தன்னந்தனியா பேச வெக்கிறா
என்னை கண்ண தொறந்தே தூங்க வெக்கிறா

அவ கூந்தலுல தூங்கும் ஒரு பூவா மாற வேணும்
அவ கொல்லும் நெனப்பு எனக்கு
ஒரு நோவா மாற வேணும்…

Movie: Pulikkuthi Pandi
Lyrics: Mohan Raja
Music: N. R. Raghunanthan