Lyricist Thamarai

யாரோ யாரோ பாடல் வரிகள்

யாரோ யாரோ நான் யாரோ உன்னை விட்டு நான் வேறோ 
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ 

காற்றே காற்றே சொல்வாயோ காலம் தாண்டி செல்வாயோ
கண்ணீர் விட்டு கரையும் என்னை காப்பாயோ

இது கனவா கனவா இல்லை நெனவா நெனவா
இது கணவாய் இருந்தால் கலைதே போகும் போகட்டும்

இது நிழலா நிழலா இல்லை ஒளியா ஒளியா
இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்

ஹோ யாரோ யாரோ நான் யாரோ உன்னை விட்டு நான் வேறோ
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ 

முதல் முறை இங்கு நீ இன்றி நடக்கிறேன் தனியாக
இறந்தும் ஏன் உன் மூச்சு காற்றை உணர்கிறேன் இதமாக

சரிபாதியில் இரவும் பகலும் என கூறியே உலகம் சுழலும்
ஒரு பாதியே பிரிந்தே போனால் என்னாகும்

நினைவால் இனி நான் வாழ நதி போல் இனி நாள் போக
எதனால் இனி ஆறும் ஆறும் என் காயம்

யாரோ யாரோ நான் யாரோ உன்னை விட்டு நான் வேறோ
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ

கனாக்களில் வரும் பெண் பின்பம் திகைக்கிறேன் யார் என்று 
முகத்திரை அதை தள்ளி பார்த்தால் முறைக்கிறாய் நீ நின்று

கனகாம்பர இதழை விரித்து குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து
திரும்பாமலே நடந்தால் சென்றால் எது மிஞ்சும்

நிறமாலையை போல் நெஞ்சம் நெளிந்தாடிடும் பல வண்ணம்
உன்னை பார்த்ததும் பாராதது போல் சிறு வஞ்சம் 
உன்னை பார்த்ததும் பாராதது போல் சிறு வஞ்சம்

யாரோ யாரோ நான் யாரோ உன்னை விட்டு நான் வேறோ
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ

காற்றே காற்றே சொல்வாயோ காலம் தாண்டி செல்வாயோ
கண்ணீர் விட்டு கரையும் என்னை காப்பாயோ

இது கனவா கனவா இல்லை நெனவா நெனவா
இது கணவாய் இருந்தால் கலைதே போகும் போகட்டும்

இது நிழலா நிழலா இல்லை ஒளியா ஒளியா
இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்…

Movie: Maattrraan
Lyrics: Thamarai
Music: Harris Jayaraj

Leave a Reply