Lyricist Na. Muthukumar

யாரோ உச்சி கிளை மேலே பாடல் வரிகள்

யாரோ.. உச்சி கிளை மேலே..
குடைப்பிடித்தாரோ.. அது யாரோ..
பெரும் மழைக்காட்டை திறக்கும் தாழோ..
யாருமின்றி யாரும் இங்கு இல்லை..
இந்த பூமி மேலே.. தன்னந்தனி உயிர்கள் எங்குமில்லை..

பேரன்பின் ஆதி ஊற்று.. தரனனன்னே நன்னே நானா..
அதை தொட்டித்திறக்குது காற்று.. தரனன்னே நன்னே நானா..
அடி தரையில் வந்தது வானம்.. தரனன்னே நன்னே நானா..
இனி நட்சத்திரங்களின் காலம்.. தரனன்னே நன்னே நானா..

காட்டில் ஒரு குறு குறு பறவை
சிறு சிறு சிறகை அசைக்கிறதே..
காற்றில் அதன் நடனத்தின் ஓசை
கைகளை நீட்டி அழைக்கிறதே..

காலம் அது திரும்பவும் திரும்புது..
கால்கள் முன் ஜென்மத்தில் நுழையுது..

பெண்ணே நீ அருகினில் வர வர காயங்கள் தொலைகிறதே..
அடி கண்ணீரில் கண்கள் மறையும்போது
நீ வந்தாயே.. உன் தோலில் நானும் சாயும்போது நீ என் தாயே…

Movie: Taramani
Lyrics: Na. Muthukumar
Music: Yuvan Shankar Raja