Movie: Dhoorathu Pachai (1987)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Gangai Amaran and Vani Jayaram
Added Date: Feb 11, 2022
பெண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
ஆண்: இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்
பெண்: இடை நோயில் வாடுவதும் தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்
ஆண்: இரு கண்கள் பேசுவதும் கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்.
பெண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
பெண்: தினம் நான் ஏங்கினேன் பல நாள் வாடினேன்
ஆண்: உயிர் நீ தானடி விழி நீர் ஏனடி
பெண்: ஒரு முள்ளில்லாத இமை நெஞ்சில் காதல் சுமை பார் கண்ணா
ஆண்: இனி நாளும் இன்ப சுகம் நானும் உந்தன் வசம் வா கண்ணே
பெண்: வருவேன் தருவேன் மண நாளில் பெண்ணாகவே
ஆண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
பெண்: இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்
ஆண்: இடை நோயில் வாடுவதும் தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்
பெண்: இரு கண்கள் பேசுவதும் கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்.
ஆண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
ஆண்: இடையே இங்கு வா இளநீர் கொண்டு வா
பெண்: அடடா தாகமோ அதில் தான் தீருமோ
ஆண்: இது வாடைக் காலமடி மோக தாகமடி நீ தந்தாய்
பெண்: ஒரு ஆடை காற்றில் விழ ஆசை கண்ணில் எழ நீ வந்தாய்
ஆண்: அடியே கொடியே மடி மேல் என் சிம்மாசனம்…
பெண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
ஆண்: இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்
பெண்: இடை நோயில் வாடுவதும் தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்
ஆண்: இரு கண்கள் பேசுவதும் கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்.
பெண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்