Movie: Dhoorathu Pachai (1987)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Gangai Amaran and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
ஆண்: இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்

பெண்: இடை நோயில் வாடுவதும் தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்

ஆண்: இரு கண்கள் பேசுவதும் கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்.

பெண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்

பெண்: தினம் நான் ஏங்கினேன் பல நாள் வாடினேன்
ஆண்: உயிர் நீ தானடி விழி நீர் ஏனடி

பெண்: ஒரு முள்ளில்லாத இமை நெஞ்சில் காதல் சுமை பார் கண்ணா

ஆண்: இனி நாளும் இன்ப சுகம் நானும் உந்தன் வசம் வா கண்ணே

பெண்: வருவேன் தருவேன் மண நாளில் பெண்ணாகவே

ஆண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
பெண்: இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்

ஆண்: இடை நோயில் வாடுவதும் தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்

பெண்: இரு கண்கள் பேசுவதும் கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்.

ஆண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்

ஆண்: இடையே இங்கு வா இளநீர் கொண்டு வா
பெண்: அடடா தாகமோ அதில் தான் தீருமோ

ஆண்: இது வாடைக் காலமடி மோக தாகமடி நீ தந்தாய்

பெண்: ஒரு ஆடை காற்றில் விழ ஆசை கண்ணில் எழ நீ வந்தாய்

ஆண்: அடியே கொடியே மடி மேல் என் சிம்மாசனம்…

பெண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
ஆண்: இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்

பெண்: இடை நோயில் வாடுவதும் தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்

ஆண்: இரு கண்கள் பேசுவதும் கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்.

பெண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்