Lyricist Na. Muthukumar

வேணா வேணா பாடல் வரிகள்

வேணா வேணா விழுந்திடுவேனா கண்கள் கண்டால் கவுந்திடுவேனா
ஓரு முறை சிரிக்கிறாய் என் உயிரினை பறிக்கிறாய்

கண்கள் ரெண்டும் அணுகுண்டா கத்தி கொண்ட பூச்செண்டா
இன்பமான சிறை உண்டா ஈர விழியில் இடம் உண்டா
கடவுள் பூமி வந்தால் உன் கண்ணை பார்க்க வேண்டும்
மனிதன் பாவம் என்று அவன் மறைந்து போக வேண்டும்

வேணா வேணா விழுந்திடுவேனா கண்கள் கண்டால் கவுந்திடுவேனா

வளையாத நதிகள் எல்லாம் நதிகள் என்று ஆகாது
சிணுங்காத கொலுசுகள் எல்லாம் சங்கீதங்கள் பாடாது

மடியினில் தலையணை செய்தாய்
மெல்ல வந்து மனதினில் கலவரம் செய்தாய்

ஓரு கண்ணில் வன்முறை செய்தாய்
பாவம் என்று மறு கண்ணில் மருந்துகள் தந்தாய்

ஒஹோ வசீகரா வசீகரா நீ வதம் செய்ய நிதம் வர வேண்டும்
வலைக்கரம் உடைத்திட வேண்டும்

இதயம் வருடி விடவா.. உன் இதயம் திருடி விடவா..
விழியில் நுழைந்து விடவா என் வழியை மறந்து விடவா

வேணா வேணா விழுந்திடுவேனா கண்கள் கண்டால் கவுந்திடுவேனா

அய்யய்யோ ஹிட்லர் பெண்ணே என்னை என்ன செய்தாயோ
ஹார்மோன்கள் ஹார்மோனியம்கள் வாசிப்பதை கண்டாயோ

ஜனவரி நிலவென்னை கொள்ளும் வெட்கமின்றி ஜனகனமன சொல்லி செல்லும்
குறு குறு பார்வைகள் சொல்லும் சேதி என்ன கடவுளும் குழம்புவான் இன்னும்

ஓஹோ… குண்டு மல்லி குண்டு மல்லி அதில் பட்டு பட்டு பட்டாம்பூச்சி ஆனாய்
தொட்டு தொட்டு குண்டு வைத்து போனாய்

எனக்குள் உன்னை தொலைத்து நீ உனக்குள் என்னை தேடு
இரண்டு உயிர்கள் இருந்தால் அதை காதல் என்று கூறு

வேணா வேணா விழுந்திடுவேனா கண்கள் கண்டால் கவுந்திடுவேனா
ஓரு முறை சிரிக்கிறாய் என் உயிரினை பறிக்கிறாய்

கண்கள் ரெண்டும் அணுகுண்டா கத்தி கொண்ட பூச்செண்டா
இன்பமான சிறை உண்டா ஈர விழியில் இடம் உண்டா

கடவுள் பூமி வந்தால் உன் கண்ணை பார்க்க வேண்டும்
மனிதன் பாவம் என்று அவன் மறைந்து போக வேண்டும்…

Movie: Vaseegara
Lyrics: Na. Muthukumar
Music: S. A. Rajkumar