Lyricist Vairamuthu

வனிதாமணி வனமோகினி பாடல் வரிகள்

கண்ணே தொட்டுக்கவா, கட்டிக்கவா, கட்டிக்கிட்டு, ஒட்டிக்கவா
தொட்டுகிட்டா பத்திக்குமே, பத்திகிட்டா பத்தட்டுமே
அஞ்சுகமே நெஞ்சு என்ன விட்டு விட்டு துடிக்குது..
கட்டழகி உன்ன எண்ணி கண்ணு முழி பிதுங்குது..

கொத்தி விட வேண்டுமென்று கொக்கு என்ன துடிக்குது..
தப்பிவிட வேண்டுமென்று கெண்டை மீனு தவிக்கிது..
குளிக்கிற மீனுக்கு குளிர் என்ன அடிக்கிது..
பசி தாங்குமா இளமை இனி, பரிமாற வா இளமாங்கனி..

வனிதாமணி வனமோகினி வந்தாடு..
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு..
உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி..
என் நெஞ்சிலே தக்கத்திமி தாளமடி..
உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி..
என் நெஞ்சிலே தக்கத்திமி தாளமடி வந்து ஆடடி.!

வனிதாமணி வனமோகினி வந்தாடு..
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு..

அணைத்தவன் எனக்குள்ளே குளித்தவன் ஓ…ஓ…ஓ..
சுவைத்தவள் உயிர்வரை இனித்தவள் ஹே…ஹே..
இதயம் ததீம் ததீம் ததீம் போடாதோ..
இளமை தந்தோம் தந்தோம் என்றே பாடாதோ..

விடியும்வரை மழையோ மழை..
உன் கலையே கலை கண்ணா..
கலையின் வகை அறியும்வரை..
உடையே பகை கண்ணே..

கொஞ்சினாலும் மிஞ்சினாலும் கோடு தாண்டாதே..
வனிதாமணி வனமோகினி வந்தாடு..
பம்பிம் பம்பிம் பம்பிம் பம் பிம்பம்..
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு..
பம்பிம் பம்பிம் பம்பிம் பம் பிம்பம்..

விடிந்தது முகம் என்ன வெளுத்தது..
இரவினில் மன்னன் வந்து வெளுத்தது..
இரவில் சச்சம் சச்சம் சச்சம் போதாதோ..
பகலில் மிச்சம் மிச்சம் மிச்சம் வாராதோ..

இரவொரு விதம் பகல் ஒரு விதம்..
பருவம் பதம் கண்டேன்..
சுகமோ சுகம் தினம் ஒரு விதம்..
இதுவே இதம் என்பேன்..

நான் தொடாத பாகம் தன்னை தென்றல் தீண்டாது..

வனிதாமணி வனமோகினி வந்தாடு..
பம்பிம் பம்பிம் பம்பிம் பம் பிம்பம்..
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு..
பம்பிம் பம்பிம் பம்பிம் பம் பிம்பம்..

உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி..
என் நெஞ்சிலே தக்கத்திமி தாளமடி..
உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி..
என் நெஞ்சிலே தக்கத்திமி தாளமடி..

வனிதாமணி வனமோகினி வந்தாடு..
பம்பிம் பம்பிம் பம்பிம் பம் பிம்பம்..
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு..
பம்பிம் பம்பிம் பம்பிம் பம் பிம்பம்..

Movie: Vikram (1986)
Lyrics: Vairamuthu
Music: Ilaiyaraaja