Valaikku Thappiya Meenu Song Lyrics

Movie: Pudhu Manithan (1991)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: ……….

ஆண்: வலைக்கு தப்பிய மீனு மாமு .. உலைக்கு வந்தது பாரு ஹோய் ..

ஆண்: வலைக்கு தப்பிய மீனு மாமு .. உலைக்கு வந்தது பாரு

ஆண்: பொறந்தது தண்ணீரிலே மீனு அழிவது வெண்ணீரிலே பொறந்தது வெண்ணீரிலே மனுஷன் அழிவது கண்ணீரிலே அட மீனும் நானும் ஒன்றல்லவோ அந்த ஞானம் சேர்ந்ததின்றல்லவோ.

ஆண்: {வலைக்கு தப்பிய மீனு மாமு .. உலைக்கு வந்தது பாரு} (2)

ஆண்: {ராமன் செய்த பாவமென்ன வனவாசம் போனானே.. திரௌபதியின் பாவமென்ன செத்து செத்து நின்றாளே..} (2)

ஆண்: தங்கம் உறுக்கப்படும் தீயில் எரிக்கப்படும் அதனால் பழுதில்ல.. உண்மை வருத்தப்படும் ரோட்டில் நிறுத்தப்படும் அதனால் இழிவில்ல.. அவமானம் கூட ஞானமாகும் பிழையில்ல. ஹோய்

ஆண்: {வலைக்கு தப்பிய மீனு மாமு .. உலைக்கு வந்தது பாரு } (2)

ஆண்: {சத்தியங்கள் தூங்கக் கூடும் சத்தியமாய் சாகாது .. புத்தகத்தில் உள்ளதெல்லாம் புத்தி என்று ஆகாது.} (2)

ஆண்: வெற்றி ஒதுங்கி நிற்கும் சற்றே பதுங்கி நிற்கும் அதனால் அழியாது. நத்தை வயத்துக்குள்ளும் முத்து ஒளிந்திருக்கும் அதுக்கே தெரியாது. . பனி மூட்டம் என்றும் வானை மூட முடியாது.

ஆண்: வலைக்கு தப்பிய மீனு மாமு .. உலைக்கு வந்தது பாரு

ஆண்: வலைக்கு தப்பிய மீனு மாமு .. உலைக்கு வந்தது பாரு

ஆண்: பொறந்தது தண்ணீரிலே மீனு அழிவது வெண்ணீரிலே பொறந்தது வெண்ணீரிலே மனுஷன் அழிவது கண்ணீரிலே அட மீனும் நானும் ஒன்றல்லவோ அந்த ஞானம் சேர்ந்ததின்றல்லவோ.