Lyricist Vairamuthu

உயிரே உயிரே அழைத்ததென்ன பாடல் வரிகள்

உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன

உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன

உன் கீதம் எந்தன் காதில் விழுமா
உன் வானம் எந்தன் பக்கம் வருமா
கங்கை எந்தன் வாசல் வருமா
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா

உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன

நீ தோன்றினாய் அடிவானமாய்
நான் வந்ததும் தொலைவாகினாய்

கண் மூடினேன் மெய் தீண்டினாய்
கை நீட்டினேன் கனவாகினாய்

மழை சாலையில் குமிழாகினாய் விரல் தீண்டினேன்
உடைந்தோடினாய்

என் தூரத்து விண்மீனே கை ஓரத்தில் வருவாயா
என்னை ஒரு முறை தொடுவாயா ஒளியே யே யே யே

உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன

காற்றெங்கிலும் உன் கீர்த்தனை கண்ணீரிலே ஆராதனை
என் தோட்டத்தில் உன் வாசனை என் ஜீவனில் உன் வேதனை

நான் தேடினேன் என் கண்ணனை
புயல் சூழ்ந்ததே என் கண்களை

நான் வேறெங்கும் மறையவில்லை
என் வேர் என்றும் அழிவதில்லை
உன் வானம் முடிவதில்லை உறவே ஹே ஹே ஹே

உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன
உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன

உன் கீதம் எந்தன் காதில் விழுமா
உன் வானம் எந்தன் பக்கம் வருமா
கங்கை எந்தன் வாசல் வருமா இல்லை
கானல் நீரில் ஓடம் செல்லுமா…

Movie: Uyirile Kalanthathu
Lyrics: Vairamuthu
Music: Deva