Lyricist Na. Muthukumar

உன்னாலே எந்நாளும் பாடல் வரிகள்

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே..
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே..
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி..
என் கண்கள் ஓரம் நீர் துளி..
உன்மார்பில் சாய்ந்து சாகத் தோணுதே ஓஹோ..ஹோ..

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே..
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே..

உபயகுசல சிரஜீவன
பிரசுதஹரித மஞ்சுளபர
சித்தாரே சஞ்சாரே

அதர ருச்சித மதுரிதபக
சுதனகனக பிரசமநிரத
பாங்கல்யே மாங்கல்யே

மமதம சமி சதி சமதசசத சக
முக மனசுக சுமணலையவ
சுசுத சகித காமம்
விரஹ ரஹித பாமம்

ஆனந்த போகம் ஆஜீவ காலம்
பாசானு பந்தம் காலானு காலம்
தெய்வானு கூலம் காம்யாச்ச சித்திம் காமயே

விடிந்தாலும் வானம் இருள் பூச வேண்டும்..
மடி மீது சாய்ந்து கதை பேச வேண்டும்..
முடியாத பார்வை நீ வீச வேண்டும்..
முழு நேரம் என் மேல் உன் வாசம் வேண்டும்..

இன்பம் எதுவரை நாம் போவோம் அதுவரை..
நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே..
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே..
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே..

ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்..
அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும்..
ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து..
உன்னோடு என்றே நான் வாழ வேண்டும்..

காலம் முடியலாம் நம் காதல் முடியுமா..
நீ பார்க்க நான் பார்க்க காதல் கூடுதே..

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே..
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே..
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி..
என் கண்கள் ஓரம் நீர் துளி..
உன்மார்பில் சாய்ந்து சாகத் தோணுதே ஓஹோ..ஹோ..

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே..
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே…

Movie: Theri
Lyrics: Na. Muthukumar
Music: G. V. Prakash Kumar