Movie: Navarathinam (1977)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

இருவர்: அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

ஆண்: கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே பலர் கண் கலங்கி வாழுகின்றார் வீட்டிலே

பெண்: கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே

ஆண்: பலர் கண் கலங்கி வாடுகின்றார் வீட்டிலே சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர் பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்

பெண்: சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்
ஆண்: பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

இருவர்: அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

ஆண்: ஓர் உயிர்தான் யாவருக்கும் உள்ளது அது ஒருமுறைதான் நம்மை விட்டு செல்வது

பெண்: ஓர் உயிர்தான் யாவருக்கும் உள்ளது

ஆண்: அது ஒருமுறைதான் நம்மை விட்டு செல்வது

பெண்: செல்வம் இன்று வந்து நாளை போவது

ஆண்: செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

இருவர்: அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

ஆண்: ஏழை கதை மேடையிலே சொல்லுவார் அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்

பெண்: ஏழை கதை மேடையிலே சொல்லுவார்

ஆண்: அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்

ஆண்: யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா

பெண்: யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா

ஆண்: அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா

இருவர்: அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்