Movie: Navarathinam (1977)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Added Date: Feb 11, 2022
ஆண்: உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
இருவர்: அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
ஆண்: கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே பலர் கண் கலங்கி வாழுகின்றார் வீட்டிலே
பெண்: கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே
ஆண்: பலர் கண் கலங்கி வாடுகின்றார் வீட்டிலே சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர் பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்
பெண்: சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்
ஆண்: பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
இருவர்: அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
ஆண்: ஓர் உயிர்தான் யாவருக்கும் உள்ளது அது ஒருமுறைதான் நம்மை விட்டு செல்வது
பெண்: ஓர் உயிர்தான் யாவருக்கும் உள்ளது
ஆண்: அது ஒருமுறைதான் நம்மை விட்டு செல்வது
பெண்: செல்வம் இன்று வந்து நாளை போவது
ஆண்: செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
இருவர்: அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
ஆண்: ஏழை கதை மேடையிலே சொல்லுவார் அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்
பெண்: ஏழை கதை மேடையிலே சொல்லுவார்
ஆண்: அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்
ஆண்: யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா
பெண்: யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா
ஆண்: அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா
இருவர்: அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்