உன் உதட்டோர சிவப்பை பாடல் வரிகள்
உன் உதட்டோர சிவப்பை அந்த மருதாணி
கடனா கேட்கும் கடனா கேட்கும்
நீ சிரிச்சாலே சில நேரம் அந்த நிலவு வந்து
உளவு பாக்கும் உளவு பாக்கும்
என் செவ் வாழை தண்டே ………………
என் செவ் வாழை தண்டே சிறு காட்டு வண்டே
உன்ன நெனச்சு தான் எச பாட்டு
கொஞ்சம் நெருங்கி வா இத கேட்டு
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஏன் மம்முத அம்புக்கு இன்னும் தாமசம் ஆஆ
அடியே அம்மணி வில்லு இல்ல இப்போ கைவசம் ஆ
ஏன் மல்லு வேட்டி மாமா மனசிருந்தா மார்க்கம் இருக்குது
என்னை பொசுக்குன்னு கவுக்க
பொம்பளைக்கு நோக்கம் இருக்குது
முருகா மலை காட்டுக்குள்ள
விறகு எடுக்கும் வேலையில தூரத்துல நின்னவரே
தூக்கி விட்டால் ஆகாதா
பட்ட விறக தூக்கி விட்டா கட்ட விரலு பட்டு புட்டா
விறகில்லாம தீ புடிக்கும் வெட்கம் கெட்டு போகாதா..
நீ தொடுவதா தொட்டுக்கோ
சொந்தத்துல வரைமுறை இருக்கா
நீ பொம்பள தானே உனக்கு அது நியாபகம் இருக்கா
உன் நெனப்பு தான் நெஞ்சுக்குள்ள பச்சை குத்துது ஆஆ
அட உன் கிறுக்குல எனக்கு இந்த பூமி சுத்துது ……
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஆ ஆஆ ஆஆஆ
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஆ ஆஆ ஆஆஆ
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ஆஆஆஆஆ
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ஆஆஆஆஆ
சிங்கம் புலி கரடி கண்டா சேர்த்தடிக்க கை துடிக்கும்
பொட்டு கன்னி உன்ன கண்டா புலி கூட தொட நடுங்கும்
உம்ம நெனச்சு பூசையில
வேப்பெண்ணையும் நெய் மணக்கும்
நீ குளிச்ச ஓடையில நான் குளிச்சா பூ மணக்கும்
ஏய் வெட்கம் கெட்ட பெண்ணே என்னை ஏன் தூக்கி சுமக்குற
என் மனசுக்குள் புகுந்து ஏன் மச்சான் இறங்க மறுக்குற
அடி என் நெஞ்சிலே ஏண்டி யம்மா வத்தி வைக்குற
உன் ஆசைய எதுக்கு இன்னும் பொத்தி வைக்குற ஆஆ…
Movie: Panchalankurichi
Lyrics: Vairamuthu
Music: Deva