Lyricist Vaali

தூளியிலே ஆடவந்த பாடல் வரிகள்

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே 
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே 
தொட்டில் மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே 
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே

பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும் 
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்
பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும் 
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்

ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன் 
ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன் 
நான் படிச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான் 
ஏடெடுத்துப் படிச்சதில்ல சாட்சியிந்த பூமி தான்

தொட்டில் மேலே முத்து மாலை 
வண்ண பூவா விளையாட  சின்னத் தம்பி எசபாட

சோறுபோடத் தாயிருக்க பட்டினியப் பார்த்ததில்ல 
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
சோறுபோடத் தாயிருக்க பட்டினியப் பார்த்ததில்ல 
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல

தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நான் அழுவேன்
நான் அழுதா தாங்கிடுமா உடனே தாய் அழுவா

ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ளை தான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லைதான்
தொட்டில் மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட…

Movie: Chinna Thambi
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja

Leave a Reply