Lyricist Kalaikumar

திருநாளு பாடல் வரிகள்

ஏலேலல்லே ஏலேலல்லே லேலே
தனனனன்னனா…. தனனனன்னனா….

ஆ….ஆஆஆஆஆஆஆஆ…..
தனனனன்னனா…. தனனனன்னனா….

திருநாளு தேரழகா மவராசன் நடையழகா
பிறை போலே நெத்தியிலே செந்தூர பொட்டழகா

மண் அதிர நீ நடந்தா சிங்கமே பதுங்கும்
கோபுரமா நீ எழுந்தா வானமே வணங்கும்..

திருநாளு தேரழகா மவராசன் நடையழகா
பிறை போலே நெத்தியிலே செந்தூர பொட்டழகா
தனனனன்னனா…. தனனனன்னனா….

நாத்து நீயும் நட்டுப்புட்ட ராசா.. களையும் இல்லை
எங்கும் வெளையுமுங்க தங்கம்
தாலி தொட்டு வாழ்த்தி நீயும் தந்தா
மனசு ரெண்டும் சேரும்..வருஷம் நூறு வாழும்..

பாவம் தீர தேவையில்லை காசியாத்திரை
உங்க வாசல் தேடி எங்க பாதயாத்திரை
தெனம் தேயும் நெலவு எங்க சாமி பேரச் சொல்லி தேயாம வளருது… ஆங்..

திருநாளு தேரழகா மவராசன் நடையழகா
பிறை போலே நெத்தியிலே செந்தூர பொட்டழகா

மண் அதிர நீ நடந்தா சிங்கமே பதுங்கும்
கோபுரமா நீ எழுந்தா வானமே வணங்கும்..

திருநாளு தேரழகா மவராசன் நடையழகா
பிறை போலே நெத்தியிலே செந்தூர பொட்டழகா
தனனனன்னனா…. தனனனன்னனா….

Movie: Suryavamsam
Lyrics: Kalaikumar
Music: S. A. Rajkumar