Lyricist Vairamuthu

திருமண மலர்கள் பாடல் வரிகள்

திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியை தருவாயா வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

மலர்வாய் மலர்வாய் கொடியே கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே நானும் அவனும் அருகே

பிறந்த இடம புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியை தருவாயா வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

தாலி கொள்ளும் பெண்கள் தாயை நீங்கும் போது
கண்ணோடு குற்றாலம் பாய்வதுண்டு

மாடி கொண்ட ஊஞ்சல் மடிமேல் கொஞ்சும் பூனை
சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு

அந்த நிலை இங்கே இல்லை அனுப்பி வைக்க வழியே இல்லை
அழுவதற்கு வாய்ப்பே இல்லை அதுதான் தொல்லை

போனவுடன் கடிதம் போடு புதினாவும் கீரையும் சேரு
புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை
ஏன் என்றால் சுவர் தான் உண்டு தூரம் இல்லை

இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா
வீட்டுக்குள்ளே விண்மீன்கள காய்த்திடுமா

திருமண மலர்கள் தருவாயா தினம் ஒரு கனியை தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

கன்னம் கிள்ளும் மாமி  காதை திருகும் மாமா
என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு

மாதம் பத்து செல்ல மழலை பெற்றுக்கொள்ள
அம்மம்மா தாய் வீடு ரெண்டு உண்டு

பாவாடை அவிழும் வயதில் கைறு கட்டிவிட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவன உறவானவன்

கொழுசு இடும் ஓசை கேட்ட மனசில் உள்ள பாஷை சொல்வான்
மழை நின்ற மலரை போல பதமானவன்
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்

தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே..
தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே..

திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியை தருவாயா வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

மலர்வாய் மலர்வாய் கொடியே கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே நானும் அவனும் அருகே

பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும தூரம் இல்லை…

Movie: Poovellam Un Vasam
Lyrics: Vairamuthu
Music: Vidyasagar

Leave a Reply