Lyricist Vairamuthu

தாலாட்டும் காற்றே பாடல் வரிகள்

தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா 
தொலை தூர நிலவே வா தொட வேண்டும் வானே வா

உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் என் ஜென்மம் 
வீணென்று போவேனோ உன் வண்ண திருமேனி 

சேராமல் என் வயது பாழ் என்று ஆவேனோ
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல் என் ஆவி சிறிதாகி போவேனோ
என்னுயிரே நீ தானோ என்னுயிரே நீ தானோ

தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா
தொலை தூர நிலவே வா தொட வேண்டும் வானே வா

கண்ணுக்குள் கண் வைத்து கண் இமையால் கண் தடவி
சின்னதொரு சிங்காரம் செய்யாமல் போவேனோ

பேச்சிழந்த வேளையிலே பெண் அழகு என் மார்பில்
மூச்சு விடும் ரசனையை முகராமால் போவேனோ

உன் கட்டு கூந்தல் காட்டில் நுழையாமல் போவேனோ
அதில் கள்ள தேனை கொஞ்சம் வருகாமல் போவேனோ

நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ

நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில் அதை உனக்கு ஒளி பரப்ப மாட்டேனோ 
என்னுயிரே.. நீ தானோ என்னுயிரே.. நீ தானோ
தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா

ஒரு நாள் ஒரு பொழுது உன் மடியில் நான் இருந்து 
திருநாள் காணாமல் செத்தொளிந்து போவேனோ

தலையெல்லாம் பூக்கள் பூத்து தள்ளாடும் மரமேறி இலையெல்லாம்
உன் பேரை எழுதாமல் போவேனோ

உன் பாதம் வாங்கி நெஞ்சில் பதியாமல் போவேனோ
உன் கண்ணீர் எச்சில் ருசியை அறியாமல் போவேனோ

உன் உடலை உயிர் விட்டு போனாலும் என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ
உன் உடலை உயிர் விட்டு போனாலும் என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ

உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி நீ வாழும் வரை நானும் வாழ்வேனோ
என் உரிமை நீ தானோ.. என் உரிமை நீ தானோ..

தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா 
தொலை தூர நிலவே வா தொட வேண்டும் வானே வா

உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் என் ஜென்மம் வீணென்று போவேனோ 
உன் வண்ண திருமேனி சேராமல் என் வயது பாழ் என்று ஆவேனோ
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல் என் ஆவி சிறிதாகி போவேனோ
என்னுயிரே.. நீ தானோ என்னுயிரே.. நீ தானோ நீ தானோ…

Movie: Poovellam Un Vasam
Lyrics: Vairamuthu
Music: Vidyasagar

Leave a Reply