S.A. Rajkumar Lyrics

தாயே திரிசூலி அங்காள மாரி ஓம்காரி மாரியம்மா பாடல் வரிகள்

ஓம் சக்தி மகாசக்தி ஓம் சக்தி மகாசக்தி
தாயே திரிசூலி அங்காள மாரி ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா

தாயே திரிசூலி அங்காள மாரி ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா

ஓ என்னம்மா கோபமா எங்களை பாரம்மா
சிம்ம ரதம் ஏறிடம்மா எங்க முன்னாலே
வந்து நடமாடிடம்மா

தாயே திரிசூலி அங்காள மாரி ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா

அம்மா பூ முடிக்கிற பொன் அணியுற காட்சிய பாரு
இந்த பூமி மொத்தமும் ஜொலிஜொலிக்கிற மேனிய பாரு

அம்மா கண்ணு முழிக்கிறா அங்க பாரு
அம்மா பொன்னா ஜொலிக்கிறா அங்க பாரு

அம்மா வாரி கொடுக்கிற கைய்ய பாரு
அந்த வானச் செவப்புல கன்னம் பாரு

அம்மம்மா பூஞ்சிரிப்புல புல்லரிக்குதம்மா உன் சிரிப்புக்கு ஈடேது
அம்மா கண்ணில் தெரியுதே வைர தீபம்
அவ சங்கு கழுத்துதான் பவளமாகும்

எங்க அம்மா எழுந்துட்டா குலவய போடு
பண்ணாரி பாதத்தில் பூஜைய போடு

அம்மா எழுந்து நீ ஆட்டம் போடு
இந்த ஊரு செழித்திட வாக்கு கூறு

தாயே திரிசூலி அங்காள மாரி ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா

திண்ணக்கு திண்ணக்கு தா திண்ணக்கு திண்ணக்கு தா
ஜலஜல ஜலஜல ஜலஜல திண்ணக்கு தா

சக்தி அலங்காரி சந்தன பூமாரி தாயீ பராசக்தி
திண்ணக்கு திண்ணக்கு தா

தாயே நீதானே ஊராளும் நாயகி
தாயே நீதானே ஊராளும் நாயகி

பாலம் கெட்ட மத்தளம் கொட்ட வந்தாடு மாரியே
ஜெய ஜெய சக்தி சிவ சிவ சக்தி

பாலம் கெட்ட மத்தளம் கொட்ட வந்தாடு மாரியே
ஜெய ஜெய சக்தி சிவ சிவ சக்தி

திரிபுர சுந்தரி அம்மா அடி பத்திரகாளி பங்காரம்மா அம்மா
இந்த அண்டம் நடுங்க ஆடடி தாயே

பாளைய தாயே அம்மா ஒரு பத்தியம் இருந்தோம் முப்பாத்தம்மா
அம்மா உன் தண்டை குலுங்க ஆடடி தாயே

உலகாளும் ஜெகன் மாயே அம்மா சிவகாமி
எங்கள் குறை தீர அருள் வாக்குதாடி

மகராசி உயிர் யாவும் படைக்கின்ற ஜனனி
பம்பை ஒலியோடு வர வேண்டும் பவனி

இந்து முஸ்லிமுக்கும் இரத்தம் ஒன்றல்லவா
சூசை வடிவேலும் ஒருதாயின் பிள்ளை அல்லவா

சந்தனம் பூசிக்கோ குங்குமம் பூசிக்கோ
தாயீ பராசக்தி ஒன்றென வேண்டிக்கோ

சந்தானம் பூசிக்கோ குங்குமம் பூசிக்கோ
தாயீ பராசக்தி ஒன்றென வேண்டிக்கோ

தாயீ பராசக்தி ஒன்றென வேண்டிக்கோ
தாயீ பராசக்தி ஒன்றென வேண்டிக்கோ…

Movie: Simmarasi
Lyrics: S. A. Rajkumar
Music: S. A. Rajkumar