Lyricist Vairamuthu

செவ்வந்தி பூவே பாடல் வரிகள்

செவ்வந்தி பூவே செவ்வான தீவே தேனாகி வந்தாய் முன்னாலே
ஆணாகி போனேன் உன்னாலே

என் வீட்டுகாரா தென்னாட்டு தீரா
கண்ணாக வந்தாய் முன்னாலே
பெண்ணாகி போனேன் உன்னாலே

அடியே வங்கிகாரி முத்தம் கடனா தாடி
வட்டி அசலுக்கு மேல போட்டு தாரேன்

உன்ன பிணையா தந்து உயிர எழுதி தந்தா
இரவுக்கு என்ன கடனா தாரேன்

கல்யாணச்சேலை கொஞ்சம் கசங்கட்டும்
கண்ணால இன்னும் கொஞ்சம் நசுங்கட்டும்
தள்ளி போடாதே தாப்பா போடாதே

உன்னை பிள்ளை செய்வேன் கொஞ்சம் தொல்லை செய்வேன்
கண்ணா ஆசைக்கு தோதா ஆண்மை செய்வேன்

வீட்டில் வேலை செய்வேன் தோட்டம் தூய்மை செய்வேன்
சந்தர்ப்பம் பார்த்து தாய்மை செய்வேன்

அப்பாவி பூனை பாலை குடிக்குமா
பூனைக்கு பானை என்ன பொறுக்குமா
சற்று தள்ளி போ நேரம் சொல்லி போ

செவ்வந்தி பூவே செவ்வான தீவே தேனாகி வந்தாய் முன்னாலே
ஆணாகி போனேன் உன்னாலே

என் வீட்டுகாரா தென்னாட்டு தீரா கண்ணாக வந்தாய் முன்னாலே
பெண்ணாகி போனேன் உன்னாலே…

Movie: Kanne Kalaimaane
Lyrics: Vairamuthu
Music: Yuvan Shankar Raja