Sempattu Poove Song Lyrics

Movie: Purusha Lakshanam (1993)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

ஆண்: செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே.. பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தேவதையே..

ஆண்: மண்ணிலே ஒரு வெண்ணிலா கலை வண்ணங்கள் இந்த பெண்ணிலா குளிர் மேகம் உந்தன் கண்ணிலா குயில் பாடும் கீதம் சொல்லிலா

ஆண்: செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே.. பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தேவதையே..

ஆண்: காஞ்சி பட்டுடுத்தி நடந்திடும் கங்கையின் ஊர்வலமோ கால பிரம்மனவன் வழங்கிய பெண்ணினச் சீதனமோ மண்ணிலே அந்த தேவன் சபை வந்து கூடும் பல வாழ்த்துச் சொல்லி உன்னை பாடும் புன்னகைதான் பொன்னகையோ கன்னிகை வா வா வா

ஆண்: செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே.. பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தேவதையே..

பெண்: பூவின் நெஞ்சுக்குள்ளே புதுவித போதை துள்ளியதே.ஏ… காதல் பள்ளியிலே படித்திட ஆசை சொல்லியதே..ஏ…

பெண்: என்னவோ இது என்றும் இல்லாத மயக்கம் இமை ரெண்டும் ஒட்டாமல் உறக்கம் என் விழியில் உன் முகம்தான் வென்றது வா வா வா

பெண்: செம்பட்டுப் பூவும் வெண் மொட்டுத் தேரும் ஸ்ரீரங்கனாதருக்கே.ஹோய் பொன் மொட்டு மானும் பூந்தட்டுத் தேனும் என்னுயிர் ராமனுக்கே.ஹோய்

பெண்: மண்ணிலே வந்த வெண்ணிலா இந்த கண்ணனைக் கொஞ்சும் பெண் நிலா குளிர் மேகம் உந்தன் கண்ணிலா குயில் கீதம் காதல் சொல்லிலா

ஆண்: ஆ…ஆ..ஆ.செம்பட்டுப்பூவே வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தேவதையே..