Lyricist Kabilan

சகலகலா வல்லவனே சலவை செய்த சந்திரனே பாடல் வரிகள்

சகலகலா வல்லவனே சலவை செய்த சந்திரனே
சகலகலா வல்லவனே சலவைச் செய்த சந்திரனே
சகலகலா வல்லவனே சலவை செய்த சந்திரனே
சகலகலா வல்லவனே சலவைச் செய்த சந்திரனே

தென்னவனே சின்னவனே தேவதையின் மன்னவனே
இவன் பருவத்தை அணைக்கின்ற போது பத்து விரல் பத்தாது
கனவா இவள் காதலியா மனதைக் கிள்ளும் மனைவியா

காதல் ஒற்றைக் கண்ணில் காமம் ஒற்றைக் கண்ணில்
எந்தக் கண்ணால் என்னைப் பார்க்கிறாய் கண்ணா கண்ணா….

காமம் காதல் ரெண்டும் எந்தன் கண்ணில் இல்லை
கண்கள் மூடி உன்னைக் காண்கிறேன் கண்ணே கண்ணே

நீ வேறு நான் வேறு நாம் வேரு பூவும் ஆவோம்
நீ என்னை வளைக்காதே நான் கேள்விக்குறி ஆகிப் போவேனே

சிற்பம் போல வாழ்ந்தேன் என்னை செதுக்க வந்தாய்
மீண்டும் பாறை ஆவேன் நியாயமா காதல் பெண்ணே பெண்ணே

தொட்டில் செடி ஆனேன் தோட்டம் வந்து சேர்ந்தேன்
காம்பைத் தீண்டும் வேளை கைகளில் விழுந்தேன் கண்ணா

உன் வாயால் என் பேரை நான் உச்சரிக்க வேண்டும்
உன் தீயால் என் சேலை தினம் தீக்குளிக்க வேண்டும் வேண்டுமே

சகலகலா வல்லவனே சலவைச் செய்த சந்திரனே
தென்னவனே சின்னவனே தேவதையின் மன்னவனே
என்னை பூவுக்குள் நீ பூட்டும் வேலை போதும் போதும் உன் லீலை…

Movie: Pammal K. Sambandam
Lyrics: Kabilan
Music: A.R.Rahman