சகியே சகியே பாடல் வரிகள்
சகியே சகியே சகித்தால் என்ன சுகத்தில் விழுந்து சுகித்தால் என்ன
உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக.. உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக..
உன் கண்ணில் என் பார்வை ஒன்றாக.. நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக..
ஏப்ரல் மாதத்தில் பூக்கும் பூக்கள் அத்தனையும்
இன்று முன் கூட்டி மலா்ந்ததென்ன
உந்தன் கொலுசின் பாடல் கொடியின் காதில் கேட்டது கேட்டது அதனால்
ஜூலை ஏழாம் நாள் மாலை ஏழு பத்தோடு உந்தன் காலங்கள் உறைந்ததென்ன
உன்னை முதலாய் முதலாய் பார்த்ததும் மூச்சே நின்றது நின்றது அதனால்
உன் உயிரின் பெண் வடிவம் நான்தானே என் உயிரின் ஆண் வடிவம் நீதானே
என்னென்று ஏதென்று சொல்வேனே சில்லென்று தீ ஒன்று நீதானே
சகியே சகியே சகித்தால் என்ன உன்னை கண்டதும் எந்தன் பச்சை நரம்பும்
வெட்க செந்தூரம் மடிந்ததென்ன..
உந்தன் உடலும் உடையும் மூடல் கொள்ளும் ரகசியம் ரகசியம் என்ன
உன்னை கண்டதும் வானின் பாதி நீயென்று வானில் அசரீரி ஒலித்ததென்ன
எந்தன் உயிரும் உடலும் உந்தன் திசையில் சாய்ந்தது சாய்ந்தது என்ன
உன் மார்பும் உன் தோளும் என் வீடு என்னென்ன செய்வாயோ உன் பாடு
உன் கன்னம் நான் உண்ணும் பூக்காடு உன் உதடே என் உணவு இப்போது
சகியே சகியே சுகித்தால் என்ன சகியே சகியே சகித்தால் என்ன…
Movie: Youth
Lyrics: Vairamuthu
Music: Mani Sharma