Lyricist Vairamuthu

புத்தம் புது பாடல் வரிகள்

புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா

இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா

செல்லக் கிளி என்னை குளிப்பிக்க வேண்டும்
சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும்

கல்லு சிலை போலே நீ நிற்க வேண்டும்
கண்கள் பார்த்துத் தலைவார வேண்டும்

நீ வந்து இலை போட வேண்டும் நான் வந்து பரிமாற வேண்டும்
என் இமை உன் விழி மூட வேண்டும்
இருவரும் ஒரு சுவரம் பாட வேண்டும்
உன்னில் என்னைத் தேட வேண்டும்

புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா

கன்னி உந்தன் மடி சாய வேண்டும்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்

உன்னைக் கட்டிக்கொண்டு தூங்க வேண்டும்
உந்தன் விரல் தலை கோதிட வேண்டும்

கண்ணோடு இதம் காண வேண்டும்
கண்ணீரில் குளிர் காய வேண்டும்

உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்
உயிருக்குள் உயிருக்குள் சென்று சேர வேண்டும்
தாயாய் சேயாய் மாற வேண்டும்

புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா

இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்…

Movie: Amaravathi
Lyrics: Vairamuthu
Music: Bala Bharathi