Lyricist Vaali

போவோமா ஊர்கோலம் பாடல் வரிகள்

போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்

அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா
பனியிலும் வெட்டவெளி வெயிலிலும் உள்ள சுகம் அரண்மனை கொடுக்குமா
குளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா

சிலுசிலு சிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா
பளிங்கு போல உன் வீடு வழியில பள்ளம் மேடு

வரப்பு மேடு வயலோடும் பறந்து போவேன் பாரு
அதிசயமான பெண்தானே புதுசுகம் தேடி வந்தேனே

போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்

கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்
கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்

ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே
உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொன்னும் புரியல

கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும்
அணைகள் நூறுபோட்டாலும் அடங்கிடாம ஓடும்
போதும் போதும் உம் பாட்டு பொறப்படப் போறேன் நிப்பாட்டு

போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்…

Movie: Chinna Thambi
Lyrics: Vaali 
Music: Ilaiyaraaja

Leave a Reply