Movie: Anandha Thandavam (2009)
Music: G. V. Prakash kumar
Lyricists: Vairamuthu
Singers: Srinivas and Shreya Goshal
Added Date: Feb 11, 2022
ஆண்: பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சிநேகமே
பெண்: காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே
ஆண்: விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்
பெண்: நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம் காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே
ஆண்: தண்டவாளம் பக்கம் பக்கம் தொட்டு கொள்ள நியாயம் இல்லை நீயும் நானும் பக்கம் பக்கம் கட்டிக்கொள்ள சொந்தம் இல்லை
பெண்: வாசனை தீண்டிட நினைக்கிறாய் அது வசப்பட போவதில்லை வானுக்கும் பூமிக்கும் என்றுமே மழை உறவுகள் தீர்வதில்லை..ஈ…
பெண்: காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே..ஏ..
ஆண்: இதய கூட்டை பூட்டிக்கொண்டேன் கதவை தட்டி கலகம் செய்தாய் கதவை பூட்டி உள்ளே சென்றேன் கண்கள் வழியே மீண்டும் வந்தாய்
பெண்: வருசங்கள் மாறிய போதிலும் புது வசந்தங்கள் வருவதுண்டு.. வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு
ஆண்: பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சிநேகமே
ஆண்: விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்
ஆண் மற்றும்
பெண்: நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்
பெண்: ஆஆகா ஆஹாஹா ஆஅ..
ஆண்: ஹ்ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம் ஹும்ம்ம்.