Lyricist Vairamuthu

பூவே வாய் பேசும்போது பாடல் வரிகள்

பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு
பூவின் மொழி கேட்டுக்கொண்டு
காற்றே நல் வார்த்தை சொல்லு

குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன்
என்னை தாண்டி போனால் நான் விழுவேன்
மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன்

பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு
பூவின் மொழி கேட்டுக்கொண்டு
காற்றே நல் வார்த்தை சொல்லு

குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன்
என்னை தாண்டி போனால் நான் விழுவேன்
மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன்

பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே
புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்

பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே
புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே

காதலன் ஆணைக்கு காத்திருப்பேன்
கைக்கெட்டும் தூரத்தில் பூத்திருப்பேன்

உன் சுவாச பாதையில் நான் சுற்றி திருகுவேன்
உன் சுவாச பாதையில் நான் சுற்றி திருகுவேன்

என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கிறாய்
என்ன நான் சொல்வேன்

பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு
பூவின் மொழி கேட்டுக்கொண்டு
காற்றே நல் வார்த்தை சொல்லு
ஓஓஓ ஓஓஓஓ ஓஓ ஓஓஓ

நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை
நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை
நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை
நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை

நேசத்தினால் என்னை கொன்றிவிடு
உன் நெஞ்சுக்குள்ளே என்னை புதைத்துவிடு

என் நினைவு தோன்றினால் துளி நீரை சிந்திடு
என் நினைவு தோன்றினால் துளி நீரை சிந்திடு

அட நூறு காவியம் சொல்லி தோற்றது என்று
நீ சொல்வது ஆஹா ஆஆ

பூவே வாய் பேசும்போது ஹ்ம்ம்
காற்றே ஓடாதே நில்லு ஹ்ம்ம்
பூவின் மொழி கேட்டுக்கொண்டு ஹ்ம்ம்
காற்றே நல் வார்த்தை சொல்லு ஹ்ம்ம்

குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன்
என்னை தாண்டி போனால் நான் விழுவேன்
மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன் மன்றாடுவேன்…

Movie: 12B
Lyrics: Vairamuthu
Music: Harris Jayaraj